Headlines
பழனி கோட்டத்தில் 89,100 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

பழனி கோட்டத்தில் 89,100 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

பழனி : ஜூலை 02,தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், பழனி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக ஒன்பதாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று (01-07-2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.பாலசமுத்திரம் குரும்பப்பட்டியில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, பழனி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் முத்துசாமி பாண்டியன் தலைமை தாங்கி, தடுப்பூசி பணியினைத் தொடங்கி வைத்தார். இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சத்யா ஆகியோர் அடங்கிய கால்நடை…

Read More
பழனி கூனகாளி அம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி : ஜூலை 01 : திண்டுக்கல் மாவட்டம் பழனி கச்சேரி புதுதெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் முளைப்பாரி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, பழனி சித்தநாதன் & சன்ஸ் உரிமையாளர் திரு. பழனிவேல் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

Read More
கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

முதலமைச்சர் திரு, ச. ஜோசப்விஜய் அவர்களின், 52- வது பிறந்த நாளை ஒட்டி கோவை மாவட்டம் 35-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் திரு. V. சம்பத்குமார் அவர்கள், பள்ளி குழந்தைகளுக்கான நோட் புத்தகங்களையும் துப்புறவு பணியாளர்களுகு, நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். உடன் வார்டு செயலாளர், திரு,நாராயணன், கட்சி நிர்வாகிகள், மற்றும்பொதுமக்கள்,கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி.

உடல், மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல்துறை முன்னெடுப்பு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 20) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காவல்துறையினரின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தினசரி காவல் பணிகளில் நீண்ட…

Read More
உள்ளூர் வேலைவாய்ப்பு கோரி கூடங்குளத்தில் சாலை மறியல்

உள்ளூர் வேலைவாய்ப்பு கோரி கூடங்குளத்தில் சாலை மறியல்.

NPCIL ஆட்சேர்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய நுழைவுவாயில் முன்பு, நிரந்தர பணியிடங்களில் உள்ளூர் பகுதி மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அணுமின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அணுமின் நிலையம் செயல்பட்டு…

Read More
காலத்தைப் பதிவு செய்த ‘வேர்களைத்தேடி’ மாலிக்தினார் பைத்துல்மாலின் தோற்றமும் வளர்ச்சியும் நூலாக வெளியீடு

காலத்தைப் பதிவு செய்த ‘வேர்களைத்தேடி’ மாலிக்தினார் பைத்துல்மாலின் தோற்றமும் வளர்ச்சியும் நூலாக வெளியீடு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக மற்றும் கல்விசார் பணிகளில் ஈடுபட்டு வரும் மாலிக்தினார் பைத்துல்மாலின் தோற்றம் மற்றும் வளர்ச்சி வரலாற்றைப் பதிவு செய்யும் “வேர்களைத்தேடி – மாலிக்தினார் பைத்துல்மால் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூல் வெளியீட்டு விழா, பைத்துல்மால் மாலிக்தினார் சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது. இப்ராஹிம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் ஆசிரியர் இப்ராஹிம் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். திருவை முஸ்லிம் ஆர்ட்ஸ் கல்லூரி தாளாளர் முகமது அலி தலைமை தாங்கி, நூலை…

Read More
மார்ஷல் நேசமணிக்கு அரசு மரியாதை நினைவு தினத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்

மார்ஷல் நேசமணிக்கு அரசு மரியாதை நினைவு தினத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினத்தையொட்டி, நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. மணிமண்டபத்தில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவச் சிலைக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் ஐஏஎஸ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி உள்ளிட்டோர்…

Read More
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்.

மேல மணக்குடி மீனவர்களின் குடும்பங்களை சந்தித்தார் எம்எல்ஏ தளவாய்சுந்தரம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மேல மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களின் குடும்பத்தினரை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமையை கேட்டறிந்த அவர், மீனவர்கள் திரும்பி வரும் வரை அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். வாழ்வாதாரத்தை இழந்து சிரமங்களை எதிர்கொண்டு வரும் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய…

Read More
இயந்திர விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இயந்திர விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.

நாகர்கோவில் அருகே மீன் வலை உற்பத்தி தொழிற்சாலையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விசாரணை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மீன் வலை உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தொழில்துறை விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பணியாளர் நலன் தொடர்பாக இந்த சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற தொழிலாளி, இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்தபோது இயங்கிக் கொண்டிருந்த…

Read More
வடசேரி பேருந்து நிலையக் கடைகளுக்கு ₹1 லட்சம் அபராதம்.

வடசேரி பேருந்து நிலையக் கடைகளுக்கு ₹1 லட்சம் அபராதம்.

கழிவுநீர் வெளியேற்றம் குறித்து புகார்; மாநகராட்சி நடவடிக்கை. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் சில கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மொத்தம் ₹1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா பேருந்து நிலையத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது, சில கடைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் பொதுச் சுகாதாரத்துக்கு…

Read More