Headlines
ஜீவ சமாதியான குடிநீர் கிணறு… ஜொலிக்கும் விளக்குகளுக்கு நடுவே தாகத்தில் தவிக்கும் மக்கள்!

ஜீவ சமாதியான குடிநீர் கிணறு… ஜொலிக்கும் விளக்குகளுக்கு நடுவே தாகத்தில் தவிக்கும் மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு மேல பெருவிளை பகுதியில் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்த பழமையான கிணறு, “புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்” என்ற வாக்குறுதியுடன் அதிகாரிகளால் மண்ணால் மூடப்பட்டு, இன்று ஜீவ சமாதியாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேறாமல் மாதங்கள் கடந்தும் புதிய குடிநீர் வசதி ஏற்படுத்தப்படாததால், அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். வீட்டு குடிநீர் இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ற குடிநீர்…

Read More
ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி நடை

ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி நடை.

மருத்துவர் இரா. ஸ்டாலின் எஸ்.பி. அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளரும், ரஹ்மத் கார்டன் ஊர் ஜமாஅத் தலைவருமான ஷேக் முகமது பாராட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஊருக்கு ஒரு காவலர்’ திட்டம், மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைமுறையில் இருந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்தத் திட்டம், ஊர் மட்டத்தில் நேரடி கண்காணிப்பை உறுதி செய்து,…

Read More
திண்டுக்கல் அருகே விதிகளை மீறி செயல்படும் கல் குவாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.

திண்டுக்கல் அருகே விதிகளை மீறி செயல்படும் கல் குவாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.

திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் பகுதி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட தாடிக்கொம்பு அடுத்துள்ள கோவில்பட்டி, குருநாத நாயக்கனூரில் விதிகளை மீறி கல்குவாரி ஒன்று ஐந்து ஆண்டுகளுக்கு கடின பாறைகளை உடைத்து கற்களாக மாற்றும் உரிமத்தை மணிக்கண்ணன் மகன் சங்கர் என்பவர் பெற்றுள்ளார். பொதுவாக அரசு ஒப்பந்தம் பெரும் தொழில்களில் அனைத்து விதிகளையும் பின்பற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பொதுமக்களுக்கு விரோதமாகவும் ஆபத்தான முறையில் எந்த ஒரு விதியையும் பின்பற்றாமல் விதிகளை மீறி இந்தக் கல்குவாரி…

Read More
வல்லம் செய்யது மசூது திவான் ஒலி காட்டுப்பள்ளி வாசல் கொடி ஏற்றும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

வல்லம் செய்யது மசூது திவான் ஒலி காட்டுப்பள்ளி வாசல் கொடி ஏற்றும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி ஜனவரி 21 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள செய்யது மசூது திவான் ஒலி காட்டுப்பள்ளி வாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வல்லம் முஸ்லிம் ஜமாத்துக்கு பாத்தியப்பட்ட காட்டு பள்ளிவாசல் கொடியேற்ற நிகழ்வு பச்சை களை ஊர்வலம் மேல தாளங்கள் முழங்க நிறைபிறை கோடியானது வல்லம் பெரிய பள்ளிவாசலில் இருந்து தொடங்கி பிரதான பாதைகளில் வலம் வந்து சிறிய பள்ளிவாசலான சேகுவர்ஷா தர்காவில் கொடி ஏற்றப்பட்டு பின்னர் ஊர்வலமாக காட்டு…

Read More
மதுரை : எல்ஐசி தீ - திடீர் திருப்பம்

மதுரை : எல்ஐசி தீ – திடீர் திருப்பம்

மதுரை எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கில் அதிரடி திருப்பம். கல்யாணி நம்பி என்ற பெண் மேலாளர் தீ விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது அம்பலம். பெண் மேலாளரை கொன்றதாக அலுவலக உதவி மேலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் கைது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
கோட்டார் இளங்கடை ஈத்கா மைதானத்தில் சிறுவர் பூங்கா – மேயர் ரெ.மகேஷ் திறப்பு

கோட்டார் இளங்கடை ஈத்கா மைதானத்தில் சிறுவர் பூங்கா – மேயர் ரெ.மகேஷ் திறப்பு.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் இளங்கடை முஸ்லீம் சமுதாய ஈத்கா மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவின் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளுக்கான புதிய விளையாட்டு உலகம் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திரு. ரெ.மகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் உரையாற்றுகையில், “இப்பூங்கா அப்பகுதி சிறுவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கவும், மனமகிழ்ச்சியுடன் நேரத்தை கழிக்கவும் பெரிதும்…

Read More
கோவையில் 50- ஆண்டுகாலமாக பள்ளிக்கூடம் நடத்தி தனது விசுவாசத்தை சொந்த மாநிலமான கேரளாவுக்கு காட்டிய நிர்வாகம்

கோவையில் 50- ஆண்டுகாலமாக பள்ளிக்கூடம் நடத்தி தனது விசுவாசத்தை சொந்த மாநிலமான கேரளாவுக்கு காட்டிய நிர்வாகம்.

தமிழ்நாட்டில் கோவையில்50 ஆண்டு காலமாக நடந்து வரும் பள்ளி அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் மாணவிகள் மட்டுமே படிக்கும் இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக பேண்ட் இசை குழு பல போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தென்னிந்திய அளவில் தெலுங்கானாவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான பேண்ட் வாத்திய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அவிலா பள்ளி முதலிடம் பெற்றது. போட்டி நடந்து 20 நாட்களுக்கு பிறகு…

Read More
மாநகராட்சிக்கு மாமூலா? விதிகளுக்குச் சவால் விடும் உணவகங்கள்: நாகர்கோவிலில் தொடரும் விதிமீறல்கள்!

மாநகராட்சிக்கு மாமூலா? விதிகளுக்குச் சவால் விடும் உணவகங்கள்: நாகர்கோவிலில் தொடரும் விதிமீறல்கள்!

நாகர்கோவில், ஜனவரி 18: நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் சில தனியார் உணவகங்கள், அரசு விதிமுறைகளையும் போக்குவரத்துச் சட்டங்களையும் துச்சமாக மதித்துச் செயல்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வடசேரி பேருந்து நிலையம் மற்றும் நீதிமன்ற சாலைப் பகுதிகளில் உணவகங்களின் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுப் பலகைக்கே சவால்!வடசேரி பேருந்து நிலையப் பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஒரு உணவகம், மாநகராட்சியின் விதிகளை வெளிப்படையாகவே மீறி வருகிறது. அந்தப் பகுதியில்…

Read More
பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் 63-வது நினைவு நாள்: நாகர்கோவிலில் மரியாதை

பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் 63-வது நினைவு நாள்: நாகர்கோவிலில் மரியாதை.

நாகர்கோவில், ஜன.18 :பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் அவர்களின் 63-வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (18.01.2026) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஆகியோர் முன்னிலையில் மரியாதை நிகழ்வு நடைபெற்றது. மேலும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி…

Read More
ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக பிறந்தநாள் விழா.

ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக பிறந்தநாள் விழா.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உத்திரபிரதேசம் மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் 70வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து மாயாவதியின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக மேற்கு மாவட்ட தலைவர் நாச்சிமுத்து முன்னிலையாக மக்கள் தேசிய மறுமலர்ச்சி கட்சி தலைவர் ஆடலூர். இராமமூர்த்தி விழாவின் சிறப்பாலைப்பாளராக பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்…

Read More