அரசியல்
விளவங்கோடு வேட்பாளராக டி.டி.பிரவீன்: கவனத்தை ஈர்க்கும் காரக்கோணம் மருத்துவக் கல்லூரி வழக்கின் பின்னணி!
விளவங்கோடு தொகுதியின் வேட்பாளராக முன்னாள் சபை செயலாளர் டி.டி.பிரவீன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்புடைய வழக்கொன்று குறித்த தகவல்கள் தற்போது தேர்தல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. திருவனந்தபுரம் காரக்கோணம் டாக்டர்.சோமர்வெல் மெமோரியல் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 28 மாணவர்களின் பெற்றோர்களிடம் சுமார் ரூ.7.22 கோடி பணம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முன்னாள்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு!
பழனி | ஏப்ரல் 02: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாடு பிராமண சமாஜம் தனது முழு ஆதரவை அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தச் சமாஜத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம், மாநிலத் தலைவர் ஹரிஹர முத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துத் தலைவர் ஹரிஹர முத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு ஆட்சிமுறைக்கு ஆதரவு “தமிழக…
கூட்டணிக் கட்சிகளுக்கு ‘டஃப்’ கொடுக்கும் திமுக: 2021-ல் அதிமுக வென்ற 29 தொகுதிகள் ஒதுக்கீடு – முழுமையான அலசல்!
வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரங்கள் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளன. ஆளும் கட்சியான திமுக இம்முறை கையாண்டுள்ள தொகுதிப் பங்கீட்டு வியூகம் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற 29 முக்கிய தொகுதிகளை, இம்முறை திமுக தனது கூட்டணிக் கட்சிகளின் வசம் ஒப்படைத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளிலேயே அதிகபட்சமாக காங்கிரஸ்…
திமுக தான் என் மூச்சு… ஆனால் என் குரல் யாருக்காவது கேட்கிறதா?’ – அடிமட்ட தொண்டனின் கொந்தளிப்பு!
“கலைஞர் என் பேச்சு, தளபதி என் நாடித்துடிப்பு… ஆனால் அங்கீகாரம் எங்கே?” – உருக்கும் உண்மை வெளிப்பாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்ட தொண்டர்களிடையே கொந்தளிப்பு நிலை உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. “திமுக தான் என் மூச்சு… கலைஞர் தான் என் பேச்சு… தளபதி தான் என் நாடித்துடிப்பு…” என்று உயிரோடு இணைத்துப் பற்றிக்கொண்டு வாழும் ஒரு அடிமட்ட தொண்டன், இன்று தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். கட்சிக்காக பகலும் இரவும் பாராமல் உழைக்கும் தொண்டர்களின்…
“நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப…” – நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!
நாகர்கோவில், மார்ச் 20 : தனியார் தொலைக்காட்சியில் நாகர்கோவில் நாகராஜா கோவில் பகுதியில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இளைஞர்கள், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். விவாதத்தின் போது அமைச்சர் பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தொடர்ந்து விசில் அடித்தும், கிண்டல் செய்தும் இடையூறு…
அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்
மதுரையில் அனைத்து நீதி கட்சி மாநிலத் தலைவர் P.O.யோசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டார்கள் இந்த சந்திப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் கல்லானை கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் செல்வம் தலைமை ஒருக்கினைபாளர் , விஜயன் மாநில பொருளாளர், கார்த்திகா,ஜான்சன், சுந்தர், வெங்கடேஷ், சுதர்சன், பாண்டி செல்வி, மணிகண்டன், யாழினி, முரளி, கெளரி,…
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
5 மாநிலங்களிலும்17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.” தமிழ்நாடு வாக்காளர்கள் மொத்தம் – 5.67 கோடி பேர் என வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆண்கள் – 2.77 கோடி , பெண்கள் – 2.89 கோடி , மூன்றாம் பாலினத்தவர் – 7,617 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் முதல்…
மாற்றுதிரனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் விலையில்லாத மாற்றுத்திறனாளிக்கான இருசக்கர வாகனம்வழங்கினார். உடன்,கோவை மாவட்ட துணை மேயர் திரு, வெற்றி செல்வன், அரசு ஊழியர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு அவர்களின் திருவுருவசிலை திறப்பு விழா.
தமிழ்நாடு முதலமைச்சர், கோவைக்கு மேலும் அழகு சேர்கும் விதமாக கோவை வ. உ. சி. பூங்காவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு அவர்களின் திருவுருவசிலையை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார், விழாவில்கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு.துரை.செந்தமிழ் செல்வன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார், இந்நிகழ்வில் திரு. ஜி.டி.கோபால், திரு. கிருஷ்ணராஜ் வாணவராயர், மேயர் திருமதி. இரங்கநாயகி இராமச்சந்திரன், துணை மேயர் திரு. வெற்றிசெல்வன், கோவை மாநகராட்சி ஆணையர் திரு. சிவகுரு பிரபாகரன், மாநில தீர்மானக் குழு செயலாளர்…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை இன்று (05.03.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு,…
