மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் 10 நாளில் 10 கொடூர கொலைகள் நடந்து உலக சாதனை படைத்துள்ளது.
யானைகல் பகுதியில் பழக்கடைகள் பகல் மற்றும் இரவு பொழுதுகளில் இயங்கி வருகிறது. நள்ளிரவில் இரு தரப்பினர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு கொடூரமாக மோதிக்கொண்டனர் .
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பு காணப்பட்டது.
ஏற்கனவே விளக்குத்துண் காவல் நிலையத்தில் பணிபுரியும் விஜயகுமார் ( SI ) குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று புகார் இருந்து வருகிறது சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ராஜேந்திரன் குற்றவாளி ஆதரவா செயல்படும் விஜயகுமாரை (SI)பாதுகாக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதற்கு விஜய் வருகிறார் என்று மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா கூறியுள்ளார். மதுரை மக்களுக்கே பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் வந்தால் பாதுகாப்பு எவ்வாறு சாத்தியமாகும்..
செய்தியாளர் : சின்னத்தம்பி.
