பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்த ரூ.3.65 கோடி ஒதுக்கீடு: விரைவில் பணிகள் தொடங்கும் – அமைச்சர் விக்னேஷ் தகவல்
பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை சீரமைத்து தூய்மைப்படுத்துவதற்காக மொத்தம் ரூ.3 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். பழனியில் நடைபெற்ற தனியார் பேக்கரி திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விக்னேஷ் வருகை தந்தார். முன்னதாக அவர் கட்சி அலுவலகத்திற்குச் சென்றபோது, மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன், நகரச் செயலாளர்…
