பழனி அருகே 3 நாட்களாக தொடரும் மின்வெட்டு: அலட்சியம் காட்டும் மின்சார வாரியம் – தவிக்கும் கலிக்கநாயக்கன்பட்டி மக்கள் கொந்தளிப்பு!
பழனி: செப். 11,பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் மின்வெட்டு காரணமாக பகல் நேரக் கடும் புழுக்கத்திலும், இரவு நேரக் கொசுக்கடியிலும் தூக்கத்தைத் தொலைத்து மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாகப் பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும்…
