பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அழிவின் விளிம்பில்: முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி முறையான பராமரிப்பும், போதிய ஆசிரியர் நியமனமும் இன்றி அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையேயும் முன்னாள் மாணவர்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர்கள், சிறந்த ஆசிரியர்கள் எனப் பல துறை சாதனையாளர்களை உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பள்ளியில், சில மாதங்களுக்கு முன்பு பணிபுரிந்த ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னர், பள்ளிக்கு நிலையான தலைமை ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படவில்லை. தற்போது பொறுப்புத் தலைமை ஆசிரியரே அனைத்துப் பணிகளையும்…
