இந்தியா
தென்னந்தோப்பில் முதியவர் சடலம் மீட்பு:எஸ்.டி.பி.ஐ மருத்துவக் சேவை குழு உதவியுடன் ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றம்.
கன்னியாகுமரி, ஏப் 10, கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புளியடி சுடுகாட்டுப் பகுதியிலுள்ள தென்னந்தோப்பு ஒன்றில், முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் வெட்டூர்ணிமடம் அடுத்த கட்டையன்விளையைச் சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரின் மகன் தாசன் (76) என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் இறந்து சுமார் மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.சடலம் துர்நாற்றம் வீசும் அளவிற்கு மிகவும்…
கூட்டணிக் கட்சிகளுக்கு ‘டஃப்’ கொடுக்கும் திமுக: 2021-ல் அதிமுக வென்ற 29 தொகுதிகள் ஒதுக்கீடு – முழுமையான அலசல்!
வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரங்கள் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளன. ஆளும் கட்சியான திமுக இம்முறை கையாண்டுள்ள தொகுதிப் பங்கீட்டு வியூகம் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற 29 முக்கிய தொகுதிகளை, இம்முறை திமுக தனது கூட்டணிக் கட்சிகளின் வசம் ஒப்படைத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளிலேயே அதிகபட்சமாக காங்கிரஸ்…
பழனி PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா: தமிழ்க் கலாச்சார முறைப்படி ‘VISHWA’26’ கோலாகலம்!
பழனி | மார்ச் 26, 2026 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா, “VISHWA’26 – தமிழ் கலாச்சாரம்” என்ற கருப்பொருளில் (Theme) தனியார் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மங்களகரமான தொடக்கம்விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரை மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, குத்துவிளக்கேற்றி விழா முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்புஇவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.ஏங்கள்ஸ்…
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் வழிகாட்டல் படி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.த ரவிசங்கர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளராக செயலாற்றி வரும் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து அவர்கள் மற்றும் துணை ஆணையர் வெங்கடேஷ் விளையாட்டு விழாவிற்கு தலைமை தாங்கி…
ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு.
பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள அடிவளிமண்டலத்தில், அழுத்த வேறுபாடுகளின் காரணமாக மிக வேகமாக வீசும் குறுகிய காற்றோட்டம் ‘ஜெட் காற்று’ எனப்படுகிறது. இந்த மேலடுக்கு அதிவேகக் காற்றில் தற்போது ஒரு சிறிய வளைவு அல்லது திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று விரிவடைந்து, செங்குத்தான மேகங்கள் உருவாவதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் விளைவாக, வருகிற மார்ச் 20-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு…
திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு – வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிச் சாய்த்து சாலை அமைக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வலாங்குளம் பகுதி நிலங்கள், ஊத்து வனச்சரகத்தின் கீழ் வருகின்றன. இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தங்களது நிலங்களுக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,…
மாவட்ட செயலாளருக்கு நகர செயலாளர் பச்சைக்கொடி.
திமுக பழனி நகர செயலாளர் வேலுமணி பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாருக்கு சென்னை அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். பழனியில் மீண்டும் பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் ஐ.பி.செந்தில்குமார் போட்டியிட மாட்டார், திண்டுக்கல்லில் போட்டியிடுவார் என்றும் பழனியில் வேலுமணி போட்டியிடுவார் என்று பழனி அரசியலில் உலவி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது இந்நிகழ்வு.
ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை, பழனியில் புலிப்பாணி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை நடைபெற்றது. முன்னதாக இந்நிகழ்வில் ஜப்பானை சேர்ந்த 50 முருக பக்தர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் இருந்து பால்குடம் ஏந்தியவாறு யாத்திரியை தொடங்கி, திரு ஆவினன்குடி முருகனை தரிசித்து பாலபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மாலை வேலையில் நடைபெற்ற தேர் திருவிழாவில் தேர் இழுத்து மாரியம்மனுக்கு நடைபெறும் மாசி திருவிழாவில் தேர் இழுத்து தீச்சட்டி…
அரசு சுவற்றில் அரசியல் விளம்பரம் செய்யும் த.வெ.க.!
#பழனி சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக கட்சியினருக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி பேருந்து நிலையத்தில் பெருநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் த.வெ.கவினர் விசில் சின்னம் வரைந்துள்ளனர். அரசு சுவற்றில் சுவர் விளம்பரம் செய்யாதீர் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல் நமது சின்னம் விசில் என்ற முத்திரையை அச்சிட்டு விதிமுறைகளை த.வெ.கவினர் மீறியதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுசம்பந்தமாக பழனி…
அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கை!…
தமிழ்நாட்டை ஆண்டுவிட்டுப்போன அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கையான செயலுக்காய், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை..மனித உயிர்களை படுகொலை செய்த வரலாற்று துக்கத்தை..கருப்பு நாளைப்பற்றி பேசியே ஆகவேண்டும் இன்று. 18.02.1992. கால் நூற்றாண்டுக்கு முன், இதே தேதியில்.. கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா. கோவிலின் குளத்தில் நீராடினால் பாவங்கள் விலகுமென்று திரண்டுவந்த மக்களுக்கு..தங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அதுதான் இறுதி நாளென்பது தெரியாது. ராஜீவ் படுகொலை தந்த பரிசால் ..முதன்முறையாக…
