இந்தியா
பழனி கோட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நவீன தொழில் நுட்ப பயிற்சி.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டம் சார்பில் பழனி ஒன்றியத்தில் உள்ள கால்நடை விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் தற்போதைய முன்னேற்றம் மற்றும் நவீன தொழில் நுட்ப பயிற்சி நெய்காரபட்டி கால்நடை மருந்தகத்தில் இன்று 18-2-26 அன்று உதவி இயக்குனர் கால் நடை பராமரிப்பு துறை பழனி கோட்டம் தலைமையில் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் மரு.கார்த்திகேயன்,மரு.செந்தில் குமார் மரு.கௌசல்யா,மரு நந்த குமார் கலந்து கொண்டு கால்நடை களுக்கு தொழில் நுட்ப…
நாகர்கோவில் அருகே மனநிலை பாதித்த யாசகர் மீட்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் யாசகம் செய்து கொண்டு இருந்த ஒருவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ‘நிமிர்’ மீட்புக் குழுவினர் ஒன்றிணைவோம் அறக்கட்டளை, நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் இணைந்து மீட்டனர். சில ஆண்டுகளாக நாகர்கோவில் நகரில் சுற்றித் திரிந்து யாசகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இவர் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ‘நிமிர்’…
மனநலம் பாதித்த யாசகர் மீட்பு… ‘நிமிர்’ குழுவின் துரித நடவடிக்கை – காப்பகத்தில் சேர்ப்பு…
கன்னியாகுமரி, பிப் : 14கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் குப்பைகள் சேகரித்து யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை ‘நிமிர்’ மீட்புக் குழுவுடன் இணைந்து நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் பாதுகாப்பாக மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். பல ஆண்டுகளாக குமரி மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த இவர், குப்பைகளை மூட்டை மூட்டையாக சேகரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் ₹10, ₹50, ₹100 நோட்டுகள் மற்றும்…
70 வயது தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்..மடத்துக்குளம் சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள KTL சித்தி விநாயகர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயது பூர்த்தியான மூத்த தம்பதியனருக்கு சிறப்பு செய்தல் விழா நடைபெற்றது. 70 வயது பூர்த்தியான தம்பதியர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வருடம்தோறும் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விழாவானது தொடர்ந்து நடத்தப்பட்டது வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினத்தில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி…
அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு… விமானப் படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா (VSM) பங்கேற்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு கேடட்களின் (64வது பிரீமியர்ஸ்) பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு நிகழ்ச்சி 28.01.2026 அன்று பள்ளி அணிவகுப்பு மைதானத்தில் (மேஜர் ஸ்ரீ ராம் அணிவகுப்பு சதுக்கம்) சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மொத்தம் 159 கேடட்ககள் பங்கேற்றனர். இதில் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த 93 கேடட்கள் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பில் பங்கேற்று, பள்ளியில் தாங்கள் பெற்ற 7…
பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டில் (சிவ சத்தியா வீடு முதல் ராமசாமி கமலம்மாள் வீடு வரையிலான பகுதி) கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. வழக்கமாக பொந்துபுளி கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், காவலப்பட்டியில் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக…
அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பில் துறை மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உடுமலைப்பேட்டை எஸ்கே ரோபோட்டிக்ஸ் திரு சபரிநாதன் அவர்களால் இந்த Workshop கல்லூரி முதல்வர் திரு ஈ ரமேஷ் மற்றும் இசைக்கு துறை தலைவர் திரு சி நாகராஜன் அவர்கள் இவ்விழாவினை சிறப்பித்தார் Program…
அழகு மட்டும் ஆபத்தல்ல, சக்கரையும் கூட ஆபத்து.
சர்க்கரை நச்சுப்பொருளாக மாறி வரும் சூழலில் நாம் தினந்தோறும் உண்ணும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவை போல் மேற்கொள்ள இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு மாநில அரசும் முன்வர வேண்டுமென சுகாதார நல ஆர்வலர்களும் சமூக நல ஆர்வலர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் அரசு பள்ளி மதிய உணவு பட்டியலியில் சர்க்கரையின் அளவு குறைத்திருப்பதையும், பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிக்கப்படும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பழனி -நாகராஜ்
அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டிஅங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள பூச்சாத்தம் குளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறநெறி வளர்ச்சி, ஒற்றுமை, தேசிய உணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்ற சிறுவர்–சிறுமிய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி…
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘PROUD TO BE A VOTER’ – இறுதி வாக்காளர் பட்டியல் உறுதி செய்ய விழிப்புணர்வு தொடக்கம்..
இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இணைவதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் துவக்கம். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் 2026 இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “PROUD TO BE A VOTER – Selfie Point” அமைத்து பொதுமக்களிடையே…
