அரசியல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு..
மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொழிற்சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், மக்களின் நாயகன் டாக்டர். R. சொக்கர் தலைமையில் 16/11/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.
குமரி கிழக்கு மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா – தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பான கொண்டாட்டம்…
நாகர்கோவில்; நவ. 14 தமிழக வெற்றிக் கழக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் SR. மாதவன் அவர்கள் இன்று (14.11.2025) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுடன் உரையாற்றிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் சாதனைகள், குழந்தைகளிடம் அவர் கொண்டிருந்த அன்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் மேம்பாட்டில் உள்ளது என்ற…
பாஜக தொழில் வல்லுநர்கள் பிரிவின் ஆலோசனைக் கூட்டம்…
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொழில் வல்லுநர் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் பிரிவின் மாநில தலைவர் சுந்தர்ராமன் தலைமையில் நடைபெற்றது. ஜிஎஸ்டி மறுசீராய்வு மூலம் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகின்றது என்றும் அக்கூட்டத்தில் ஜிஎஸ்டி மறுசீராய்வு குறித்து கையேடு பிரிவின் மாநில தலைவரால் வெளியிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் பெற்றுக்கொண்டார். இதில் ஜிஎஸ்டி 4 பிரிவுகளாக இருந்தது. அதனை மக்களின் நலன் கருதி மத்திய அரசு நிதி அமைச்சர்…
திருநெல்வேலி பாளையங்கோட்டை, அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற, 58-வது தேசிய நூலக வார விழா! தமிழ் அறிஞர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்தினர்!
திருநெல்வேலி,நவ.13:- தமிழ்நாடு அரசு “பொது நூலகத்துறை”யின் கீழ், பாளையங் கோட்டையில் இயங்கி வரும், மாவட்ட மத்திய நூலகம், அந்நூலகத்தின் வாசகர் வட்டம் ஆகியன இணைந்து, இன்று (நவம்பர்.13) மாலையில், 58-வது தேசிய நூலக வார விழாவை, நூலக அரங்கில் நடத்தின. இதனையொட்டி, “நூல்கள் கண்காட்சி” ஒன்றும் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் அ.மரிய சூசை தலைமை வகித்தார், துணைத்தலைவர் “கவிஞர்”கோ. கணபதி சுப்பிரமணியன், அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட நூலக அலுவலர் லெ. மீனாட்சி சுந்தரம், முதன்மை…
ஜாக்டோ ஜியோ- பிரச்சார இயக்கம் இரு இடங்களில் நடந்தது..
உடுமலைநவம்பர் 13. ஜாக்டோ -ஜியோ சார்பில் தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்ற கோரி உடுமலை மடத்துக்குளம் அரசு அலுவலகங்கள் முன்பு பிரச்சார இயக்கம் நடந்தது. இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் பணியாளர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி…
உடுமலை அருகே உள்ள மானுப்பட்டியில் மாணவர்களுக்கு வேளாண்மை பயிற்சி..
உடுமலைநவம்பர் 13. உடுமலை அருகே உள்ள மானுப் பட்டியில் உள்ள அகரம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுக்கு இலவச இயற்கை விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் காங்கேயம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருந்து அட்மா திட்டத்தின் கீழ் காங்கேயம் மற்றும் படியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் பாலகுமார் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மதுஸ்ரீ,சுகன்யா, ஆகியோர் பயிற்சி வழங்கினார்கள். அப்போது…
திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
திருநெல்வேலி,நவ.13: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான, “விமன் இந்தியா மூவ்மெண்ட்” ( WOMEN INDIA MOVEMENT) அமைப்பின்,”செயற் குழு கூட்டம்” இன்று ( நவம்பர்.13) மாலையில், நகர தலைவி ஹமீதா அக்பர் தலைமையில், நடைபெற்றது. நகர செயலாளர் ஜன்னத், அனைவரையும் வரவேற்று பேசினார். இணை செயலாளர் ஜெஸிமா, முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஏர்வாடி பேரூராட்சிக்கு உட்பட்ட,…
திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்!
திருநெல்வேலி,நவ.12:- “தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்” (DGP) உத்தரவுப்படி, “மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்” வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று (நவம்பர்.12) புதன்கிழமை காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, “அண்ணா விளையாட்டு அரங்கம்” அருகில் உள்ள, “மாநகர காவல் ஆணையர்” அலுவலகத்தில், “மக்கள் குறை தீர்க்கும் முகாம்” நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில், மொத்தம் ஆறு நபர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய…
திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி,நவ.12:- இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டு, இம்மாதம் (நவம்பர்) 4-ஆம் தேதி முதல், மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (SPECIAL INTENSIVE REVISION- SIR) தொடர்பாக, கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) நிரப்பி, வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) திரும்பக் கொடுப்பது சம்பந்தமாக, இன்று ( நவம்பர். 4) காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக, கூட்ட அரங்கில், திருநெல்வேலி “மாவட்ட ஆட்சித்…
தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்கள்! இரண்டு ஆண்டுகளாக, கல்வி உரிமைத்தொகை ( RTE) பணம் வழங்காததை கண்டித்து போராட்டம்!
திருநெல்வேலி,நவ.12:- நாடு முழுவதும் தனியார் சுயநிதி பள்ளிகளில், “கல்வி உரிமை சட்டம்” எனப்படும் RTE ( RIGHT TO EDUCATION ACT) திட்டத்தின் கீழ், ஏழை- எளிய மணவர்கள் தங்குதடையின்றி, தங்களுடைய கல்விப்பயணத்தை தொடர்வதற்காக, மாணவ, மாணவியரின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒன்றிய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தனியார் சுயநிதி பள்ளிகள், எவ்வித கல்விக்கட்டணமும் பெறாமல் 25 சதவீத இடங்களில், இத்திட்டத்துக்கான தகுதியுடைய மாணவ, மாணவிகளை ஆண்டு தோறும்,…
