Headlines
"நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப..." - நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

“நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப…” – நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

நாகர்கோவில், மார்ச் 20 : தனியார் தொலைக்காட்சியில் நாகர்கோவில் நாகராஜா கோவில் பகுதியில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இளைஞர்கள், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். விவாதத்தின் போது அமைச்சர் பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தொடர்ந்து விசில் அடித்தும், கிண்டல் செய்தும் இடையூறு…

Read More
ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு

ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு.

பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள அடிவளிமண்டலத்தில், அழுத்த வேறுபாடுகளின் காரணமாக மிக வேகமாக வீசும் குறுகிய காற்றோட்டம் ‘ஜெட் காற்று’ எனப்படுகிறது. இந்த மேலடுக்கு அதிவேகக் காற்றில் தற்போது ஒரு சிறிய வளைவு அல்லது திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று விரிவடைந்து, செங்குத்தான மேகங்கள் உருவாவதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் விளைவாக, வருகிற மார்ச் 20-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு…

Read More
சட்டமன்றத் தேர்தல் 2026: மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி தொடக்கம்

சட்டமன்றத் தேர்தல் 2026: மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி தொடக்கம்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்–2026 முன்னிட்டு, மண்டல அளவிலான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இரு நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு. இரா. சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். 7 மண்டலங்களில் ஒரே நேரத்தில் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும்…

Read More
நாகர்கோவில் : காயமடைந்த அரிய வகை 'கூகை' ஆந்தை மீட்பு, இரவிலும் விரைந்தோடிய வனத்துறையினர்!

நாகர்கோவில் : காயமடைந்த அரிய வகை ‘கூகை’ ஆந்தை மீட்பு, இரவிலும் விரைந்தோடிய வனத்துறையினர்!

கன்னியாகுமரி, பிப் 25 : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார், சின்ன அரிப்புத் தெரு பகுதியில் காயமடைந்து பறக்க முடியாமல் தவித்த அரிய வகை கூகை (Barn Owl) ஆந்தையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இப்பகுதியில் இரவு 11 மணி அளவில் அடிபட்டு சோர்வாகக் கிடந்த இந்தப் பறவையைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி வன சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர் ராஜன் மற்றும்…

Read More
முதல்வர் வருகையும் முக்காடு போடும் காலி மனைகளும்: குமரியில் ‘மோடி மாடலை’ கையில் எடுத்த திராவிட மாடல்!

முதல்வர் வருகையும் முக்காடு போடும் காலி மனைகளும்: குமரியில் ‘மோடி மாடலை’ கையில் எடுத்த திராவிட மாடல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தரவுள்ள நிலையில், அவரை வரவேற்க நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ள ஒரு ‘பிரம்மாண்ட’ ஏற்பாடே தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதல்வரின் பயண வழித்தடங்களில் உள்ள தனியார் காலி மனைகளைத் தேடிப்பிடித்து, ஆளுயரத் திரைகளால் மூடும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குஜராத் மாநிலத்துக்கு வந்தபோதும், 2023…

Read More
கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.

கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து, கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதியுறுகின்றனர். இந்த நிலைமை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக மாவட்ட ஆட்சியருக்கும் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் அலட்சியம் காட்டப்படுகிறதா? என மனிதநேய ஜனநாயக கட்சி கேள்வி எழுப்புகிறது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, முதலமைச்சர் பயணம்…

Read More
நாகர்கோவில் அருகே மனநிலை பாதித்த யாசகர் மீட்பு

நாகர்கோவில் அருகே மனநிலை பாதித்த யாசகர் மீட்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் யாசகம் செய்து கொண்டு இருந்த ஒருவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ‘நிமிர்’ மீட்புக் குழுவினர் ஒன்றிணைவோம் அறக்கட்டளை, நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் இணைந்து மீட்டனர். சில ஆண்டுகளாக நாகர்கோவில் நகரில் சுற்றித் திரிந்து யாசகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இவர் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ‘நிமிர்’…

Read More
குளச்சல் நகராட்சி அலட்சியம்: கபீர் உயிரிழப்பு - மனிதநேய ஜனநாயக கட்சி கடும் கண்டனம்

குளச்சல் நகராட்சி அலட்சியம்: கபீர் உயிரிழப்பு – மனிதநேய ஜனநாயக கட்சி கடும் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சியின் அலட்சியமும் மெத்தன போக்கும் காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் முஜீப் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. கடந்த 2ஆம் தேதி, குளச்சலில் உள்ள பிஸ்மி திருமண மண்டபத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனம் குப்பை சேகரிக்க சென்றது. அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த கபீர் என்பவர் மீது குப்பை…

Read More
மனநலம் பாதித்த யாசகர் மீட்பு... ‘நிமிர்’ குழுவின் துரித நடவடிக்கை – காப்பகத்தில் சேர்ப்பு...

மனநலம் பாதித்த யாசகர் மீட்பு… ‘நிமிர்’ குழுவின் துரித நடவடிக்கை – காப்பகத்தில் சேர்ப்பு…

கன்னியாகுமரி, பிப் : 14கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் குப்பைகள் சேகரித்து யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை ‘நிமிர்’ மீட்புக் குழுவுடன் இணைந்து நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் பாதுகாப்பாக மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். பல ஆண்டுகளாக குமரி மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த இவர், குப்பைகளை மூட்டை மூட்டையாக சேகரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் ₹10, ₹50, ₹100 நோட்டுகள் மற்றும்…

Read More
புதிய கட்சி தொடங்கும் மிரட்டலுக்கு பணிந்ததா தலைமை? முன்னாள் மா.செ-வுக்கு மாநில பதவி? - நாகர்கோவிலில் சலசலப்பு!

புதிய கட்சி தொடங்கும் மிரட்டலுக்கு பணிந்ததா தலைமை? முன்னாள் மா.செ-வுக்கு மாநில பதவி? – நாகர்கோவிலில் சலசலப்பு!

நாகர்கோவில், பிப் 13 : கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர முன்னாள் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர் அல் காலித். இவர் அண்மையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான மோதல் போக்கு, அரசு அதிகாரிகளுடன் இணக்கமின்மை, கட்டப்பஞ்சாயத்து புகார்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் முரண்பாடு என அடுக்கடுக்கான புகார்களின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைமைக்கு அல் காலித் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “கட்சிக்காக…

Read More