Headlines
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா அவர்கள் இன்று (10.09.2025) கோணம் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றினார். இம்முகாமில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கல்விக் கடன் பெறும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்…

Read More
பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :

பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :

செப் 10 கன்னியாகுமரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேஷ்டி மற்றும் சேலை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளிப்பதோடு, கைத்தறி நெசவாளர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள பெரிய அரசுங்கன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு வேஷ்டிகள் நெய்யப்பட்டு வருகின்றன. கைத்தறி தொழிலாளர்கள் பல வாரங்களாக உழைத்து வந்த நிலையில்,…

Read More
கற்கள் வைத்து சாலை மறைப்பு – பொதுமக்கள் அவதி !

கற்கள் வைத்து சாலை மறைப்பு – பொதுமக்கள் அவதி !

9 செப்டம்பர் 2025 குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செந்தூரன் நகர் பகுதியில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியச் சாலையில் காங்கிரீட் செப்பனிடும் பணிக்காக கற்கள் வைத்து சாலை மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்விக் கூடம் மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள அச்சாலை, பொதுமக்கள் தினசரி அதிகம் பயன்படுத்தும் முக்கியப் பாதையாகக் கருதப்படுகிறது. ஆனால் கற்கள் வைத்து வழி மறைத்ததால், பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள் செல்லும் வாகனங்கள் கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் குளம் சுத்திகரிப்பு பணிகள் தொடக்கம் :

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் குளம் சுத்திகரிப்பு பணிகள் தொடக்கம் :

செப் 9, கன்னியாகுமரி : சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் குளத்தில் தேங்கிய சேறு, கழிவுகள் அகற்றப்படுகின்றன. மீன்பிடிப்பு உரிமை ஏலம் : குளத்தின் மீன்பிடிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டதால், ஒப்பந்ததாரர்கள் மீன்பிடிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சுத்திகரிப்பால் கிடைக்கும் பலன் : பணிகள் முடிந்ததும் நீர்த் தேக்கம் மேம்பட்டு, பக்தர்களும் உள்ளூர் மக்களும் பலனடைவார்கள் என எதிர்பார்ப்பு. கன்னியாகுமரி நகர நிருபர் : செய்லிஸ்

Read More
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !

நாகர்கோவில் : 09-09-2025 நாகர்கோவில் மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு, தொற்றுநோய் பரவும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. சுகாதார அதிகாரிகள் மெளனம் பேருந்து நிலையத்தில் குப்பை, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலையில், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆனால், சுகாதார அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். “இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?”…

Read More
குமரியில் உதவி காவல் ஆய்வாளர்கள் 14 பேர் அதிரடி இடமாற்றம் !

குமரியில் உதவி காவல் ஆய்வாளர்கள் 14 பேர் அதிரடி இடமாற்றம் !

மாவட்ட கண்காணிப்பாளர் Dr. Stalin உத்தரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 14 உதவி காவல் ஆய்வாளர்கள் அதிரடி முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவின்பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடமாற்ற உத்தரவால், மாவட்ட காவல் துறையில் புதிய பணியமைப்புகள் உருவாகி, குற்றத் தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பேணுதலில் வேகமான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !

செப் 8, கன்னியாகுமரி : கன்னியாகுமரி :சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரியில், கடல் நடுவே நிறுவப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் கண்ணாடி விரிசல் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகளை அந்தப் பாலத்தில் அனுமதித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உடனடியாக வல்லுநர் குழுவை அமைத்து பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக வைரலாகி வருகின்றன. கன்னியாகுமரி நகர…

Read More
விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு

விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்தின் கீழ் வரும் சுமார் 45 கோடி மதிப்பிலான வக்புச் சொத்து, ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு லஞ்சம் பெற்று போலி பத்திரம் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையில், வேர்க்கிளம்பி பூவாங்கோடு பத்திர பதிவாளர் கௌரிசங்கர் தொடர்புடையவர் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்து போலி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டம்…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பின் அவலம் !

நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பின் அவலம் !

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மையப்பகுதியான செட்டிகுளம் சந்திப்பு PWD ரோட்டில் கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஓடையை சீரமைக்கும் பெயரில் சிலாப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் பின்னர் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் ஓடை திறந்த நிலையில் கிடப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காங்கிரீட் கம்பிகள் முறையாக அகற்றப்படாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும்…

Read More
கடலில் சடலமாக மிதந்த ஆண் – மீட்ட காவல்துறை !

கடலில் சடலமாக மிதந்த ஆண் – மீட்ட காவல்துறை !

செப் 6 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் கடலில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் படகில் சென்று உடலை கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி…

Read More