Headlines
பணம் இல்லை, செல்போனும் பறிபோனது... நடுக்கூடத்தில் கண்ணீருடன் நின்ற அசாம் இளைஞர்கள்! கைகொடுத்த குமரி மக்கள்!!

பணம் இல்லை, செல்போனும் பறிபோனது… நடுக்கூடத்தில் கண்ணீருடன் நின்ற அசாம் இளைஞர்கள்! கைகொடுத்த குமரி மக்கள்!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாஹீன் அகமது, ஜுயல் அக்தர் ஆகிய இருவருக்கும் வயது வெறும் 20 தான். குடும்ப வறுமையைப் போக்கலாம் என்ற ஆசையில், பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி வந்து, கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் உள்ள PPK என்ற ஒப்பந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்குத் தங்குமிடம், உணவு, செய்த வேலைக்கான சம்பளம் என எதுவும் முறையாக வழங்கப்படவில்லை. இரக்கமின்றி, அடிமைகளைப் போல அதிக நேரம் வேலை வாங்கி அந்த நிறுவனம் கொடுமைப்படுத்தியதாக…

Read More
விளையாட்டு பெயரில் வணிகம்? ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு

விளையாட்டு பெயரில் வணிகம்? ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு, அதன் நடத்தும் முறையைச் சுற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆரோக்கியமான விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த நிகழ்வு, வணிக நோக்கங்கள் அதிகம் பிரதிபலித்ததாக சில பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டி-ஷர்ட்களில் நிறுவன விளம்பரங்கள் இடம்பெற்றதுடன், அரங்கம் முழுவதும் தற்காலிக கடைகள் (stalls) அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கட்டண வசூல் செய்யப்பட்டிருந்த போதிலும், குழந்தைகள் நீண்ட நேரம்…

Read More
அம்பேத்கர் 135: கன்னியாகுமரியில் விசிக மரியாதை நிகழ்வு

அம்பேத்கர் 135: கன்னியாகுமரியில் விசிக மரியாதை நிகழ்வு.

வடசேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி; கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில், பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. வடசேரியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோபிபேரறாவாளன் தலைமையேற்றார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த கொள்கைகள் குறித்து சுருக்கமாக பேசப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்….

Read More
நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் தொகுதியில் ஆளும் திமுக கட்சி சார்பில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வேட்பாளராக எஸ். ஆஸ்டின் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தரப்பில் மட்டும் மூன்று வேட்புமனுக்களும், அதே கட்சியின் எம். சிவராஜ் தரப்பில் ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொகுதி மக்களிடையேயும் அரசியல் களத்திலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே தொகுதியில் ஒரு கட்சிக்கு ஏன் இத்தனை மனுக்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழலாம். இது எந்தவித உள்கட்சிப்…

Read More
தோல்வி பயத்தில் திணறும் விளவங்கோடு காங்கிரஸ்! கேரளா வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராகவே காங்கிரஸ் தொண்டர்கள் சாலை இறங்கினர்

தோல்வி பயத்தில் திணறும் விளவங்கோடு காங்கிரஸ்! கேரளா வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராகவே காங்கிரஸ் தொண்டர்கள் சாலை இறங்கினர்.

விளவங்கோடு, ஏப். 4: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட, கேரளாவைச் சேர்ந்த டி.டி. பிரவீன் என்பவரை வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து, அந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறக் கோரி இன்று விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “விளவங்கோட்டில் காங்கிரஸுக்கு உள்ளூர் முகங்கள் இல்லையா?”, “கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த தொண்டர்களின் தியாகத்திற்கு இதுவே பரிசா?” என்ற கேள்விகளை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள்,…

Read More
தேவாலய பாதுகாப்பில் காவல் துறை வெற்றி “மன அமைதியுடன் வழிபாடு செய்தோம்” – மாணவி பாராட்டு

தேவாலய பாதுகாப்பில் காவல் துறை வெற்றி “மன அமைதியுடன் வழிபாடு செய்தோம்” – மாணவி பாராட்டு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் செயல்திறன் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. குறிப்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் 2025 கிறிஸ்துமஸ் திருவிழா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாகர்கோவில் சேர்ந்த மாணவி என். நேத்ரா தேவி, “இந்த ஆண்டு மன அமைதியுடன் தேவாலயத்திற்கு சென்று வர முடிந்தது” எனக் கூறி, நேரில் சந்தித்து பாராட்டு பத்திரம் வழங்கினார். காவல் துறையின் விழிப்புணர்வு…

Read More
"நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப..." - நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

“நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப…” – நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

நாகர்கோவில், மார்ச் 20 : தனியார் தொலைக்காட்சியில் நாகர்கோவில் நாகராஜா கோவில் பகுதியில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இளைஞர்கள், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். விவாதத்தின் போது அமைச்சர் பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தொடர்ந்து விசில் அடித்தும், கிண்டல் செய்தும் இடையூறு…

Read More
ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு

ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு.

பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள அடிவளிமண்டலத்தில், அழுத்த வேறுபாடுகளின் காரணமாக மிக வேகமாக வீசும் குறுகிய காற்றோட்டம் ‘ஜெட் காற்று’ எனப்படுகிறது. இந்த மேலடுக்கு அதிவேகக் காற்றில் தற்போது ஒரு சிறிய வளைவு அல்லது திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று விரிவடைந்து, செங்குத்தான மேகங்கள் உருவாவதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் விளைவாக, வருகிற மார்ச் 20-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு…

Read More
சட்டமன்றத் தேர்தல் 2026: மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி தொடக்கம்

சட்டமன்றத் தேர்தல் 2026: மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி தொடக்கம்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்–2026 முன்னிட்டு, மண்டல அளவிலான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இரு நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு. இரா. சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். 7 மண்டலங்களில் ஒரே நேரத்தில் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும்…

Read More
நாகர்கோவில் : காயமடைந்த அரிய வகை 'கூகை' ஆந்தை மீட்பு, இரவிலும் விரைந்தோடிய வனத்துறையினர்!

நாகர்கோவில் : காயமடைந்த அரிய வகை ‘கூகை’ ஆந்தை மீட்பு, இரவிலும் விரைந்தோடிய வனத்துறையினர்!

கன்னியாகுமரி, பிப் 25 : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார், சின்ன அரிப்புத் தெரு பகுதியில் காயமடைந்து பறக்க முடியாமல் தவித்த அரிய வகை கூகை (Barn Owl) ஆந்தையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இப்பகுதியில் இரவு 11 மணி அளவில் அடிபட்டு சோர்வாகக் கிடந்த இந்தப் பறவையைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி வன சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர் ராஜன் மற்றும்…

Read More