Headlines
இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னால் பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி

இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னால் பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி.

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி காவல் துறை சார்பில் நடைபெற்ற மெகா இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை எடுத்துரைத்தும் மெகா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, நாகர்கோவில் வடசேரி ஜங்ஷனில் தொடங்கியது. சாலைப்…

Read More
நாகர்கோவிலில் ‘செழிப்பு இயற்கை உரம்’ விற்பனை மையம் தொடக்கம். இயற்கை உரம் 5 கிலோ ரூ.30; தென்னை விளக்குமாறு ரூ.30

நாகர்கோவிலில் ‘செழிப்பு இயற்கை உரம்’ விற்பனை மையம் தொடக்கம். இயற்கை உரம் 5 கிலோ ரூ.30; தென்னை விளக்குமாறு ரூ.30

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், ஆசாரிப்பள்ளம் மேற்கு மண்டல அலுவலகத்தில் ‘செழிப்பு இயற்கை உரம்’ விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் திருமதி. ஐஸ்வர்யா IAS அவர்களின் உத்தரவின்படியும், மாநகர நல அலுவலர் திருமதி. சரோஜா அவர்களின் அறிவுரையின்படியும் இந்த விற்பனை மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நுண் உர செயலாக்க மையத்தில் தயாரிக்கப்படும் ‘செழிப்பு இயற்கை உரம்’ பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தென்னை ஓலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தென்னை விளக்குமாறுகளும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன….

Read More
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலம் தனியாருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்டா வழங்கப்பட்டு உள்ளதா.?

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலம் தனியாருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்டா வழங்கப்பட்டு உள்ளதா.?

பழனியை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்கள் தனியாருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்ட வழங்க பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு வழங்க பட்டுள்ளதா என்ற கேள்வி எழும்பி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தது தற்பொழுது தெரிய வந்த நிலையில் அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட…

Read More
27 ஆண்டுகள் வெளிநாட்டில் உழைத்து வாங்கிய சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக புகார்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முதியவர் மனு

27 ஆண்டுகள் வெளிநாட்டில் உழைத்து வாங்கிய சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக புகார்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முதியவர் மனு.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர், 27 ஆண்டுகள் குவைத்தில் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகள் அபகரிக்கப்பட்டதாகவும், தனது வீட்டிலிருந்து நகை மற்றும் பணம் திருடப்பட்டதாகவும், தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் விரிவான மனு அளித்துள்ளார். மனுதாரரின் கூறுகையில், இளவயதிலேயே குவைத் நாட்டில் கொத்தனாரின் கையாளாக பணிபுரிந்து 27 ஆண்டுகள் சேமித்த வருமானத்தில் பூதப்பாண்டி அருகே வீடு மற்றும் நிலம் வாங்கியதுடன், கேரள மாநிலம்…

Read More
குமரி மலைகள், குவாரிகள் மற்றும் சுற்றுச்சூழல்: எழும் கேள்விகள்

குமரி மலைகள், குவாரிகள் மற்றும் சுற்றுச்சூழல்: எழும் கேள்விகள்?

குவாரிகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலை அதிகரிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த சில குவாரிகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மலைப்பகுதிகளில் நடைபெறும் கனிமவளச் சுரங்கப் பணிகள் நீண்டகால சுற்றுச்சூழல் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது. குவாரிகள் திறக்கப்பட்டதற்கான காரணமாக மாவட்டத்தின் கட்டுமானத் தேவைகளுக்கு கனிமவளம் அவசியம் என்ற விளக்கம் முன்வைக்கப்படுவதாகக்…

Read More
கர்மவீரர் காமராஜருக்கு மரியாதை; ஆற்றூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பிறந்தநாள் விழா

கர்மவீரர் காமராஜருக்கு மரியாதை; ஆற்றூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பிறந்தநாள் விழா

மலர்தூவி அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணகுமார் தலைமையில், ஆற்றூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், கர்மவீரர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது பொதுச்சேவையையும் கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள்,…

Read More
அரசுப் பேருந்து பாதுகாப்பு: பராமரிப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் எழும் கேள்விகள்

அரசுப் பேருந்து பாதுகாப்பு: பராமரிப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் எழும் கேள்விகள்.

கன்னியாகுமரியில் பேருந்து கதவுகளின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் கவலை; பாதுகாப்பு ஆய்வை வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் சில தமிழக அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சில பேருந்துகளில் தானியங்கி கதவுகள் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் கூறுவதன்படி, சில பேருந்துகளில் கதவுகள் முழுமையாக மூடப்படாமல் அல்லது திறந்த நிலையிலேயே இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற நிலை,…

Read More
அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தள பதிவு: பெண் ஒருவர் கைது

அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தள பதிவு: பெண் ஒருவர் கைது

கன்னியாகுமரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை; புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் தரக்குறைவான கருத்துகள் பதிவிட்டதாகக் கூறப்படும் புகாரின் பேரில், 36 வயதுடைய பெண் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் அரசாங்கம் வழங்கும் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்காமல், அவற்றை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி லாபம் அடைவதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டதாக அங்கன்வாடி ஊழியர்களின் கூட்டமைப்பு காவல்துறையில்…

Read More
விழிப்புணர்வின் பலன்: மூன்று மாணவிகள் புகார் அளிக்க வழிவகுத்த காவல் அதிகாரிக்கு பாராட்டு

விழிப்புணர்வின் பலன்: மூன்று மாணவிகள் புகார் அளிக்க வழிவகுத்த காவல் அதிகாரிக்கு பாராட்டு.

09 ஜூலை; நெல்லை நியூஸ் திருநெல்வேலியில் சிங்கப்பெண் சிறப்புப் படையின் செயல்பாட்டை பாராட்டிய சரக டிஐஜி திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிங்கப்பெண் சிறப்புப் படை மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, மூன்று மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த குற்றச் சம்பவங்களை வெளிக்கொண்டு வந்து காவல்துறையை அணுகியுள்ளனர். இந்த முயற்சிக்கு முக்கிய பங்காற்றிய சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஜெசி மேனகாவை நெல்லை சரக காவல்துறை டிஐஜி திருநாவுக்கரசு நேரில் அழைத்து பாராட்டினார். மாணவிகள் தங்களுக்கெதிராக நடைபெற்ற…

Read More
நீட் ரத்து கோரி நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம். ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

நீட் ரத்து கோரி நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம். ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

நாகர்கோவில்: தமிழகத்தில் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, இடதுசாரி கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு DYFI மாவட்ட செயலாளர் தோழர் விஷ்ணு தலைமை தாங்கினார். RYA அமைப்பைச் சேர்ந்த தோழர் அனிற்டா பிரின்ஸ் ஆர்ப்பாட்டத்தைத்…

Read More