Headlines
விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு

விடியல் ஆட்சியில் வக்புச் சொத்து திருட்டு பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்தின் கீழ் வரும் சுமார் 45 கோடி மதிப்பிலான வக்புச் சொத்து, ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு லஞ்சம் பெற்று போலி பத்திரம் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையில், வேர்க்கிளம்பி பூவாங்கோடு பத்திர பதிவாளர் கௌரிசங்கர் தொடர்புடையவர் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்து போலி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டம்…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பின் அவலம் !

நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பின் அவலம் !

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மையப்பகுதியான செட்டிகுளம் சந்திப்பு PWD ரோட்டில் கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஓடையை சீரமைக்கும் பெயரில் சிலாப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் பின்னர் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் ஓடை திறந்த நிலையில் கிடப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காங்கிரீட் கம்பிகள் முறையாக அகற்றப்படாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும்…

Read More
கடலில் சடலமாக மிதந்த ஆண் – மீட்ட காவல்துறை !

கடலில் சடலமாக மிதந்த ஆண் – மீட்ட காவல்துறை !

செப் 6 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் கடலில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் படகில் சென்று உடலை கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி…

Read More
குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் !

குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் !

செப்6, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் :கடந்த 60 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆயுத பூஜை விழா இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் அக்டோபர் 1-ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், விழாவை நடத்த வேண்டும் என வலியுறுத்தி குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் பி.எம்.எஸ். சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள்…

Read More
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சுகந்தி ராஜகுமாரி அவர்களுக்கு பதவி உயர்வு :

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சுகந்தி ராஜகுமாரி அவர்களுக்கு பதவி உயர்வு :

செப் 5, கன்னியாகுமரி முன்னாள் குமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராகப் பணியாற்றியதும், தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக உள்ள சுகந்தி ராஜகுமாரி அவர்கள், தமிழ்நாடு மருத்துவ கல்லூரி இயக்குநரகம் மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த உயர்வினை அப்பகுதி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்தியுள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !

நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !

செப் 4 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பாரதி நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் சுப்பிரமணியம் என்பவர், அந்த தொழிலதிபரை பெரும் தொகை முதலீடு செய்வதாகக் கூறி ரூ.10 கோடி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்றது. ஆதாரங்கள்…

Read More
குமரி எம்.பி. விஜய் வசந்த் மீது அவதூறு – காங்கிரஸ் கண்டனம் :

குமரி எம்.பி. விஜய் வசந்த் மீது அவதூறு – காங்கிரஸ் கண்டனம் :

செப் 4 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் காப்பிகாடு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவர், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாட்ஸப் குழுவில் இழிவாக பேசி, அவதூறு பரப்பியுள்ளார். இதை கண்டித்து, நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
பயணிகளின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநர் – மக்கள் பரபரப்பு !

பயணிகளின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநர் – மக்கள் பரபரப்பு !

செப் 2, கன்னியாகுமரி : நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்ட தமிழகப் போக்குவரத்து துறையின் குளிர்சாதனப் பேருந்தில், அஜாக்கிரதையான செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், பொதுமக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டியதுடன், பான் பராக் போட்டு துாங்கியவாறும் இருந்ததாக பயணிகள் கூறினர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து, அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்தனர். “பொதுமக்களின் உயிரை பணயம் வைத்த ஓட்டுநரை உடனடியாக…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல் வழங்கப்பட்டது :

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல் வழங்கப்பட்டது :

செப் 1, கன்னியாகுமரி கன்னியாகுமரி பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடித்து வரும் மீனவர்களுக்கு உதவித் திட்டமாக மானிய விலையில் பரிசல்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரடியாக வழங்கினார். இதன் மூலம் அப்பகுதி மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பெரும் பலன் அடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
கோட்டாறு மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழுவின் புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு !

கோட்டாறு மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழுவின் புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு !

செப் 1, கன்னியாகுமரி : நாகர்கோவில் கோட்டாறு மறைமாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழுவின் புதிய நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில், இயக்குநராக திருமதி ஆன்ஸ்லின் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், Dr. பைசல், Dr. அரசு, திருமதி கிளாடிஸ் கில்டா ஆகியோர் முக்கிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ளனர். கோட்டாறு மறைமாவட்டத்தில் இக்குழு உருவாக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More