Headlines
முதல்வர் கோப்பை விளையாட்டில் காவலர்களை ஊக்குவித்த குமரி எஸ்.பி. ஸ்டாலின் :

முதல்வர் கோப்பை விளையாட்டில் காவலர்களை ஊக்குவித்த குமரி எஸ்.பி. ஸ்டாலின் :

செப் 10 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அரசு ஊழியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் காவல்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இன்று நடைபெற்ற கிரிக்கெட், கபடி, இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் காவல்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பல்வேறு வெற்றிகளை பெற்றனர். “எங்கள் வெற்றிக்கு காரணம், எஸ்.பி. மருத்துவர்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !

கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !

செப் 10 கன்னியாகுமரி – இன்று காலை குமரி மாவட்டம் பூவன்கோடு சந்திப்பில், வக்ஃப் சொத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த புரோக்கர் ஷேக் முகமது மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பத்திர பதிவு அலுவலகர் கௌரிசங்கர் ஆகியோரை கண்டித்து மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள 4.55 ஏக்கர் வக்ஃப் நிலம் (சர்வே எண் 171/4), லேண்ட் மாஃபியா கும்பல் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டது உறுதி…

Read More
நாகர்கோவில் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை சீர்கேடு – பொதுமக்கள் கவலை !

நாகர்கோவில் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை சீர்கேடு – பொதுமக்கள் கவலை !

செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி முன்பு கழிவுநீர் செல்லும் சாக்கடை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் சிறார்களும், அப்பகுதி பொதுமக்களும் நோய்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு, மாநகராட்சி உடனடியாக சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா அவர்கள் இன்று (10.09.2025) கோணம் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றினார். இம்முகாமில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கல்விக் கடன் பெறும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்…

Read More
பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :

பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :

செப் 10 கன்னியாகுமரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேஷ்டி மற்றும் சேலை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளிப்பதோடு, கைத்தறி நெசவாளர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள பெரிய அரசுங்கன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு வேஷ்டிகள் நெய்யப்பட்டு வருகின்றன. கைத்தறி தொழிலாளர்கள் பல வாரங்களாக உழைத்து வந்த நிலையில்,…

Read More
கற்கள் வைத்து சாலை மறைப்பு – பொதுமக்கள் அவதி !

கற்கள் வைத்து சாலை மறைப்பு – பொதுமக்கள் அவதி !

9 செப்டம்பர் 2025 குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செந்தூரன் நகர் பகுதியில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியச் சாலையில் காங்கிரீட் செப்பனிடும் பணிக்காக கற்கள் வைத்து சாலை மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்விக் கூடம் மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள அச்சாலை, பொதுமக்கள் தினசரி அதிகம் பயன்படுத்தும் முக்கியப் பாதையாகக் கருதப்படுகிறது. ஆனால் கற்கள் வைத்து வழி மறைத்ததால், பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள் செல்லும் வாகனங்கள் கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் குளம் சுத்திகரிப்பு பணிகள் தொடக்கம் :

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் குளம் சுத்திகரிப்பு பணிகள் தொடக்கம் :

செப் 9, கன்னியாகுமரி : சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் குளத்தில் தேங்கிய சேறு, கழிவுகள் அகற்றப்படுகின்றன. மீன்பிடிப்பு உரிமை ஏலம் : குளத்தின் மீன்பிடிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டதால், ஒப்பந்ததாரர்கள் மீன்பிடிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சுத்திகரிப்பால் கிடைக்கும் பலன் : பணிகள் முடிந்ததும் நீர்த் தேக்கம் மேம்பட்டு, பக்தர்களும் உள்ளூர் மக்களும் பலனடைவார்கள் என எதிர்பார்ப்பு. கன்னியாகுமரி நகர நிருபர் : செய்லிஸ்

Read More
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சுகாதார அவலம் !

நாகர்கோவில் : 09-09-2025 நாகர்கோவில் மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு, தொற்றுநோய் பரவும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. சுகாதார அதிகாரிகள் மெளனம் பேருந்து நிலையத்தில் குப்பை, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலையில், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆனால், சுகாதார அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். “இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?”…

Read More
குமரியில் உதவி காவல் ஆய்வாளர்கள் 14 பேர் அதிரடி இடமாற்றம் !

குமரியில் உதவி காவல் ஆய்வாளர்கள் 14 பேர் அதிரடி இடமாற்றம் !

மாவட்ட கண்காணிப்பாளர் Dr. Stalin உத்தரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 14 உதவி காவல் ஆய்வாளர்கள் அதிரடி முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவின்பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடமாற்ற உத்தரவால், மாவட்ட காவல் துறையில் புதிய பணியமைப்புகள் உருவாகி, குற்றத் தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பேணுதலில் வேகமான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !

செப் 8, கன்னியாகுமரி : கன்னியாகுமரி :சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரியில், கடல் நடுவே நிறுவப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் கண்ணாடி விரிசல் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகளை அந்தப் பாலத்தில் அனுமதித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உடனடியாக வல்லுநர் குழுவை அமைத்து பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக வைரலாகி வருகின்றன. கன்னியாகுமரி நகர…

Read More