Headlines
நாகர்கோவில்: எவர்கிரீன் ரோட்டரி – குமரி மாவட்ட காவல் துறை இணைந்து பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகர்கோவில்: எவர்கிரீன் ரோட்டரி – குமரி மாவட்ட காவல் துறை இணைந்து பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகர்கோவில் எவர்கிரீன் ரோட்டரி சங்கமும், கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையும் இணைந்து, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சியை எஸ்.எம்.ஆர்.வி. ஐ.டி.ஐ வளாகத்தில் நடத்தினர். அச்சங்கத்தின் தலைவர் சுபா செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின், ஐ.பி.எஸ். அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் மற்றும் AHTU விங் அதிகாரி தாமஸ் லைஸா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விரிவான…

Read More
ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி நடை

ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி நடை.

மருத்துவர் இரா. ஸ்டாலின் எஸ்.பி. அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளரும், ரஹ்மத் கார்டன் ஊர் ஜமாஅத் தலைவருமான ஷேக் முகமது பாராட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஊருக்கு ஒரு காவலர்’ திட்டம், மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைமுறையில் இருந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்தத் திட்டம், ஊர் மட்டத்தில் நேரடி கண்காணிப்பை உறுதி செய்து,…

Read More
கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரம் – இரண்டு ஆண்டுகளில் நிறைவு

கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரம் – இரண்டு ஆண்டுகளில் நிறைவு.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளர் சேக் முகமது விடுத்துள்ள வரவேற்பு அறிக்கையில் தெரிவித்திருப்பது கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை,கன்னியாகுமரி ரயில் நிலைய மேம்பாடு,அமிருத் பாரத் ரயில் சேவை – வரவேற்பு கன்னியாகுமரி–திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதும், இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெற உள்ளதாகவும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் அறிவித்துள்ள செய்தியை நாகர்கோவில் மாநகர தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகிழ்ச்சியுடன்…

Read More
கோட்டார் இளங்கடை ஈத்கா மைதானத்தில் சிறுவர் பூங்கா – மேயர் ரெ.மகேஷ் திறப்பு

கோட்டார் இளங்கடை ஈத்கா மைதானத்தில் சிறுவர் பூங்கா – மேயர் ரெ.மகேஷ் திறப்பு.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் இளங்கடை முஸ்லீம் சமுதாய ஈத்கா மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவின் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளுக்கான புதிய விளையாட்டு உலகம் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திரு. ரெ.மகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் விழாவில் அவர் உரையாற்றுகையில், “இப்பூங்கா அப்பகுதி சிறுவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கவும், மனமகிழ்ச்சியுடன் நேரத்தை கழிக்கவும் பெரிதும்…

Read More
நாகர்கோவில் செட்டிக்குளம் நடைபாதை ஆக்கிரமிப்பு: கண்டும் காணாமல் ஆய்வு செய்யும் மேயர்?

நாகர்கோவில் செட்டிக்குளம் நடைபாதை ஆக்கிரமிப்பு: கண்டும் காணாமல் ஆய்வு செய்யும் மேயர்?

நாகர்கோவில், ஜனவரி 19 : மாநகராட்சியின் முக்கிய சந்திப்பான செட்டிக்குளம் – சவேரியார் கோவில் பகுதியில்,சமீபத்தில் அவசரம் அவசரமாக நடைபாதைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்தப் பணிகள் மிக விரைவாக முடிக்கப்பட்டதன் நோக்கம் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே என்று கருதப்பட்ட நிலையில், தற்போதைய களநிலவரம் அதற்கு மாறாக உள்ளது. குறிப்பாக, மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, அவரது முன்னிலையிலேயே பல இடங்களில் நடைபாதைகள் வணிகப் பொருட்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது…

Read More
மாநகராட்சிக்கு மாமூலா? விதிகளுக்குச் சவால் விடும் உணவகங்கள்: நாகர்கோவிலில் தொடரும் விதிமீறல்கள்!

மாநகராட்சிக்கு மாமூலா? விதிகளுக்குச் சவால் விடும் உணவகங்கள்: நாகர்கோவிலில் தொடரும் விதிமீறல்கள்!

நாகர்கோவில், ஜனவரி 18: நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் சில தனியார் உணவகங்கள், அரசு விதிமுறைகளையும் போக்குவரத்துச் சட்டங்களையும் துச்சமாக மதித்துச் செயல்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வடசேரி பேருந்து நிலையம் மற்றும் நீதிமன்ற சாலைப் பகுதிகளில் உணவகங்களின் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுப் பலகைக்கே சவால்!வடசேரி பேருந்து நிலையப் பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஒரு உணவகம், மாநகராட்சியின் விதிகளை வெளிப்படையாகவே மீறி வருகிறது. அந்தப் பகுதியில்…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செண்பகராமன்புதூரில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டுவண்டிப் பந்தயத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரா. மகேஷ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். திமுக மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் அவர், தமிழர்களின் வீர விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர், இதனைப் பொதுமக்கள் திரளாகக் கூடி உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Read More
ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? - நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? – நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

கன்னியாகுமரி, ஜனவரி 16: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சூழலியல் மற்றும் ஆரோக்கியக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அந்நிறுவனத்தின் திட்டங்களை முன்னின்று நடத்துவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மணல் தோண்டி எடுக்கப்பட்டு கதிரியக்க தாதுக்கள் பிரிக்கப்படும் செயல்பாடுகளால் கடல் அரிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் விவசாய நிலங்கள் பாழாவது போன்ற…

Read More
நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில் ராமன்புதூரில் நேற்று (ஜனவரி 15) இரவு தனியார் அறக்கட்டளை சார்பில் 7-ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், ‘நிமிர்’ குழுவில் இணைந்து பொதுமக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்றிய பெண் காவலர்கள் ஜெயந்தி, ஆஷா பிரியா மற்றும் சுமதி அவர்களுக்கு, அவரது சேவையைப் பாராட்டி “சமூக சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. இந்த விருதினை மருத்துவர் நாகேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். காவல்துறைப் பணியுடன் சமூகப் பங்களிப்பிலும் சிறந்து விளங்கும் பெண்…

Read More
திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் – எவர்கிரீன் ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் – எவர்கிரீன் ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், எவர்கிரீன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பசுமை பள்ளி திட்டம் கீழ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி எவர்கிரீன் சங்கத்தின் தலைவர் ரொட்டேரியன் திருமதி சுபா செந்தில் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரொட்டேரியன் திரு செந்தில் அவர்கள் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், சங்கத்தின் செயலாளர் ரொட்டேரியன் அன்டின் விஜிலா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசில் காகரின்…

Read More