கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அதிர்ச்சி சம்பவம்.
செப் 16, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஊழியரின் ஏமாற்றால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரத்தைச் சேர்ந்த ரமணி (35) என்பவர், தனது கணவர் அஜிகுமார் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததால், குடும்பத்தை நடத்துவதற்காக அரசுப் பணியில் நியமனம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்கு ஆர்.ஐ. ஆக பணியாற்றிய வேல்முருகன், ரமணியிடம் தனது திருமணம் நடைபெறும் என நம்பிக்கை அளித்து, பணி தொடர்பான உதவியும்…
