Headlines
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செண்பகராமன்புதூரில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டுவண்டிப் பந்தயத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரா. மகேஷ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். திமுக மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் அவர், தமிழர்களின் வீர விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர், இதனைப் பொதுமக்கள் திரளாகக் கூடி உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Read More
ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? - நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? – நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

கன்னியாகுமரி, ஜனவரி 16: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சூழலியல் மற்றும் ஆரோக்கியக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அந்நிறுவனத்தின் திட்டங்களை முன்னின்று நடத்துவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மணல் தோண்டி எடுக்கப்பட்டு கதிரியக்க தாதுக்கள் பிரிக்கப்படும் செயல்பாடுகளால் கடல் அரிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் விவசாய நிலங்கள் பாழாவது போன்ற…

Read More
நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில் ராமன்புதூரில் நேற்று (ஜனவரி 15) இரவு தனியார் அறக்கட்டளை சார்பில் 7-ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், ‘நிமிர்’ குழுவில் இணைந்து பொதுமக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்றிய பெண் காவலர்கள் ஜெயந்தி, ஆஷா பிரியா மற்றும் சுமதி அவர்களுக்கு, அவரது சேவையைப் பாராட்டி “சமூக சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. இந்த விருதினை மருத்துவர் நாகேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். காவல்துறைப் பணியுடன் சமூகப் பங்களிப்பிலும் சிறந்து விளங்கும் பெண்…

Read More
திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் – எவர்கிரீன் ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் – எவர்கிரீன் ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருநெல்வேலி செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், எவர்கிரீன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பசுமை பள்ளி திட்டம் கீழ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி எவர்கிரீன் சங்கத்தின் தலைவர் ரொட்டேரியன் திருமதி சுபா செந்தில் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரொட்டேரியன் திரு செந்தில் அவர்கள் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், சங்கத்தின் செயலாளர் ரொட்டேரியன் அன்டின் விஜிலா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசில் காகரின்…

Read More
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: 234 மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: 234 மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு…

சென்னை, ஜனவரி 03: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், இன்று இரவு முகநூல் (Facebook) நேரலை மூலமாக கட்சியின் 234 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 144 மாவட்ட செயலாளர்களில் 48 பேரின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அதனுடன் 90 தொகுதி மாவட்ட செயலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தமாக 138 புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28 மாவட்டங்களுக்கான நிர்வாக அமைப்புகள் (பதவிகள் மற்றும் பொறுப்பாளர்கள்)…

Read More
அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டிஅங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள பூச்சாத்தம் குளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறநெறி வளர்ச்சி, ஒற்றுமை, தேசிய உணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்ற சிறுவர்–சிறுமிய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி…

Read More
ஜமாத் சொத்துக்களில் முறைகேடு செய்ய வற்புறுத்தல்: பள்ளிவாசல் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை - நாகர்கோவிலில் பரபரப்பு!

ஜமாத் சொத்துக்களில் முறைகேடு செய்ய வற்புறுத்தல்: பள்ளிவாசல் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை – நாகர்கோவிலில் பரபரப்பு!

நாகர்கோவில், டிசம்பர் 29: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள தைகா பள்ளி ஜமாத் ஊழியர், ஜமாத் சொத்துக்களைக் கையாடல் செய்யக் கோரி சில நபர்கள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: கோட்டாரைச் சேர்ந்த முகமது ரஜினி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான சொத்துக்களைச் சிலர் முறைகேடாக விற்பனை செய்தும், கையாடல் செய்தும்…

Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ்–புத்தாண்டு பாதுகாப்பு வைராக்கியம்! 1500 போலீசார் பணியில் — 78 சிறப்பு சோதனை அணிகள்; சட்ட மீறல்களுக்கு கடும் நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ்–புத்தாண்டு பாதுகாப்பு வைராக்கியம்!1500 போலீசார் பணியில் — 78 சிறப்பு சோதனை அணிகள்; சட்ட மீறல்களுக்கு கடும் நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதுகாக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக முழு மாவட்டத்திலும் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 78 சிறப்பு சோதனை அணிகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. Highway Patrol, Crime Control Patrol, Emergency Response Patrol, Tourist Patrol, Mobile Patrol போன்ற பல்வேறு பிரிவுகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றன. மதுவில் மிதந்து வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் ஓட்டுதல், குறைந்த வயதுடையவர்கள் வாகனம்…

Read More
கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் "மாநிலம் முழுவதும்" " நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..!

கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் “மாநிலம் முழுவதும்” ” நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..!

நவம்பர் 16,2025,தக்கலை:- தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் S.I.R-ஐ எதிர்த்து மாவட்ட தலைமையகங்களில் இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் தக்கலை மணலி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் பெரும் திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன், மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் சபின் ஆகியோர் தலைமையேற்றனர். மாவட்டம் முழுவதிலுமிருந்த கழக உறுப்பினர்கள், இளைஞர் அணி, பெண்கள்…

Read More
சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து.

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து.

தக்கலை அக்டோபர் 27, திருவிதாங்கோடு நடுக்கடை சந்திப்பு பகுதியில் முகமாத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (41) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மெடிக்கல் கடையில் மருந்து வாங்க சென்றுள்ளார் அப்போது குளச்சலில் இருந்து குலசேகரம் நோக்கி சென்ற அரசு பேருந்து (தடம் எண் 332) சாலையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில் பைக் உருகுலைந்தது தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த தக்கலை காவல்துறையினர் பஸ் மற்றும் இருசக்கர வாகனத்தை…

Read More