தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம் விரிவாக்கம் — நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கல்.
நாகர்கோவில், பிப். 9: முதலமைச்சர் தொடங்கிய திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவு; கன்னியாகுமரியில் 3,200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெற்றனர். தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர்களுக்கான 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தெரிவித்தார். ஏழை, எளியோரின் பசியை போக்கும் நோக்கில் செயல்படும் அரசு இதுவென அவர் பெருமிதம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து,…
