இதழ்கள்
கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைசி ஆடி வெள்ளி மற்றும் ஆடிப் பூரம் பண்டிகையை முன்னிட்டு, புதிய தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ரெணகாளியம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. இப்பண்டிகையை முன்னிட்டு இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினரின் உபயத்தில், கோயிலுக்கு வருகை தந்த சுமார் ஆயிரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாத பைகள் வழங்கப்பட்டனர் மேலும்கோயில் நிர்வாகத் தலைவர் செல்வராஜ் தலைமையில்…
பழனி அருகே அவலம் – சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம்; ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு!
பழனி: பழனி அருகில் உள்ள மானூர் கிராமத்தில் சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாததால், குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி டெங்கு, காலரா போன்ற கொடிய நோய்கள் பரவும் பேராபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மானூர் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் பின்புறம், சாகுல் மளிகை கடைக்கு பின்புள்ள பகுதியில் சாக்கடை கால்வாயில் கடும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் மெயின் ரோட்டிலேயே தேங்கி நின்று குளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம்…
திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வுஷூ வீராங்கனை ரேஷ்மி எஸ்.; சர்வதேச போட்டியில் இரட்டை தங்கம்!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வுஷூ வீராங்கனை ரேஷ்மி எஸ்., ஜார்ஜியா நாட்டின் படுமி (Batumi) நகரில் நடைபெற்ற Batumi Open International Wushu Tournament சர்வதேச வுஷூ போட்டியில் பங்கேற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று திண்டுக்கல் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட வுஷூ சங்கத்தின் கீழ் செயல்படும் திண்டுக்கல் குங்ஃபூ பள்ளி மாணவியான ரேஷ்மி, Cadets (12–14) Female – Long Weapons பிரிவில் பங்கேற்றார். இதில் Jianshu பிரிவில்…
பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்து நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார்.
பழனி, ஆக.9: பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பர மேஸ்வரியம்மன் மடத்துக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக ஆவ ணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பழைய ஆயக்குடி யில் குறிப்பிட்ட சமுதாயத்துக்குரிய கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடம் உள்ளது. இந்த மடத்துக்கு சொந்தமாக கிழக்கு ஆயக்குடி, மேற்கு ஆயக்குடி உள்ளிட்ட இடங்களில் பல ஏக்கரில்…
பழனி அருகே பள்ளி மாணவர்கள் சார்பாக தூய்மை பணி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றன..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பாலசமுத்திரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் பொது இடங்களில் தூய்மைப் பணிகள் செய்யும் நிகழ்வு நடைபெற்றன. தொடர்ந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டாகப் பிரித்து கொடுக்கப்பட்டன. மேலும் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு…
ஆண்டு விழாவில் சிலம்பாட்டம், விழிப்புணர்வு நாடகங்கள்: பழனியில் அசத்திய சிறு மலர் பள்ளி மாணவர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரபல சிறு மலர் மேல்நிலைப் பள்ளியில், 18-வது ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது. அரசு மருத்துவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பழனி கல்வி மாவட்ட அலுவலர் பரிமளா, பள்ளி தலைமை மேலாளர் ராணி புளோரன்ஸ் மற்றும் தலைமை ஆசிரியை லில்லி கிரேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் முத்தாய்ப்பாக, மாணவ-மாணவிகளின் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கை அதிர வைத்தன! சிறுவர்களின் சுழன்றடிக்கும் சிலம்பாட்டம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. வெறும்…
முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாள் இன்று திருவிதாங்கோடு பேரூர் சார்பில் மலர்கள் தூவி நிர்வாகிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவிதாங்கோடு, ஆகஸ்ட் 7 நிகழ்வில் திருவிதாங்கோடு பஞ்சாயத்து தலைவர் மற்றும் பேரூர் செயலாளர் ஹாரூண் ரசீத், தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளர் அருளானந்த் ஜார்ஜ், தக்கலை வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அப்சல், தக்கலை சிறுபான்மை பிரிவு வடக்கு ஒன்றிய துணை அமைப்பாளர் சமீம்,தக்கலை வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ், திருவிதாங்கோடு பேரூர் துணைச் செயலாளர் செய்யது அலி, தக்கலை வடக்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் அன்சில்மற்றும் பல முக்கிய நிர்வாகிகள்…
அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரம் (POPSK) இடமாற்றம்.
கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் (Kodai Road R.S.) பகுதியில் செயல்பட்டு வந்த அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரம் (POPSK), வரும் 07.08.2026 (வெள்ளிக்கிழமை) முதல் திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 07.08.2026 முதல் பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளும் திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இயங்கி வரும் POPSK-யில் வழங்கப்படும். பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்களது முன்பதிவு செய்யப்பட்ட நேரத்தின்படி 07.08.2026 முதல் திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செயல்படும் POPSK-யை…
பழனி பாலாறு பொருந்தல் அணை மீன் விற்பனை மையத்தில் முறைகேடு: பொதுமக்களைப் புறக்கணித்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தல் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பாக மீன் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த விலையிலும், புதியதாகவும் மீன் கிடைக்கும் என்பதால் பழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு நேரில் சென்று மீன் வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த மீன் விற்பனை மையத்தில் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும், வியாபாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு…
சதாவதானி செய்குத்தம்பி பாவலருக்கு அரசு, அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை
தமிழறிஞரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பாவலரின் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அஞ்சலி; பல்வேறு தரப்பினரும் பங்கேற்பு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் அமைந்துள்ள சதாவதானி செய்குத்தம்பி பாவலரின் நினைவு மண்டபத்தில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், இ.ஆ.ப.,…
