இதழ்கள்
நடிகர் முத்துக்காளையின் கல்விப் பயணம்: சோகத்திலும் உயர்கல்வியை நோக்கி புதிய அத்தியாயம்!
நடிகர் முத்துக்காளை தமிழ் நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு மூலமாக B.A., M.A., B.Lit. ஆகிய மூன்று பட்டப் படிப்புகளை ஏற்கெனவே படித்துப் பட்டம் பெற்றிருந்தார். அடிப்படையில் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த அவர், அப்போதிருந்த பல்கலைக்கழக விதிகளின்படி நுழைவுத் தேர்வு எழுதி பட்டப் படிப்புகளை முடித்திருந்தார். இருப்பினும், அதற்குமேல் உயர்கல்வி பயில ஆசைப்பட்ட அவருக்கு ஒரு புதிய தடை ஏற்பட்டது. முறைசார் கல்வி மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் மட்டுமே…
பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் த.வெ.க அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் பழனி மலைக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும், பழனி சக்கிலியர் மக்களுக்குச் சொந்தமான மடத்தைத் தனிநபருக்குப் பத்திரப்பதிவு செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் ஐந்தாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
மதுவின் பிடியில் தமிழ்ச் சமூகம்: இன்னும் 30 ஆண்டுகளில் DNA அழியும் அபாயம்! – பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மதுப்பழக்கம், தனிநபர் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின் மரபணுவையே (DNA) மாற்றியமைக்கும் பேரழிவை நோக்கி அழைத்துச் செல்வதாகப் பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த 1971-ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் இரு தலைமுறைகளாக மதுப்பழக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பொது சுகாதார வல்லுநர்களின் ஆய்வின்படி, தொடர்ந்து…
பழனியில் அரசு இடத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக அவதூறு பரப்பியவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்டவர் பரபரப்பு பேட்டி…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான இடம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அதில் முக்கிய குற்றவாளியாக பத்திரப்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஜஸ்டின் மணிகண்டன் நூறு கோடி இடத்தை பத்திர பதிவு செய்த அதே நாளில் பழனியில் உள்ள இட்டேரி சாலையில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 55 சென்ட் இடம் சௌந்தரபாண்டியன் என்பவருக்கு பதிவதாக அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த இடமானது பெரியப்பா நகரில் உள்ள குப்பை கிடங்கிற்கு பதிலாக 1974…
ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட விசிக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கினால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு வருகின்றன… இந்நிலையில் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சரஸ்வதி வாஞ்சிநாதன் தலைமையில் பேரூராட்சி அலுவலரிடம் 20க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் இதுவரை எவ்வித பயணம் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து…
ஏஐ மூலம் பெண்களுக்கு அவதூறு: எடப்பாடி மீது சி.வி. சண்முகம் கடும் குற்றச்சாட்டு.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவில் பெண்கள் மீது நடைபெறும் அவதூறு பிரச்சாரங்களை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் பெண் நிர்வாகிகளை குறிவைத்து ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இது கட்சிக்குள் ஆபத்தான கலாச்சாரமாக உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அவதூறு நடவடிக்கைகளை தடுக்க வேண்டிய கட்சித் தலைமையே இதை மறைமுகமாக ஊக்குவிக்கிறது எனவும் சண்முகம் குற்றம் சாட்டினார். பெண்களை அவமதிக்கும்…
திமுக விரித்த சிகப்பு கம்பளம்… தவெகவுக்கு தாவும் தர்மயுத்தம்?: எடப்பாடியைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கும் ‘கையெழுத்து’ போடப்போகிறாரா ஓபிஎஸ்?!
தமிழக அரசியலில் எப்போதுமே ஆச்சரியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை. ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணத்தை கவனிப்பவர்களுக்கு, ‘அடுத்து எந்தப் பக்கம் திரும்பப் போகிறார்?’ என்பதே பெரிய புதிராக உருவெடுத்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதலில் எடப்பாடி பழனிசாமியால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு, கட்சியிலிருந்தும் முறைப்படி வெளியேற்றப்பட்டார் ஓபிஎஸ். வீழ்ந்துவிட்டதாகக் கருதப்பட்ட அந்தத் தருணத்தில், ஆளும் திமுக தரப்பு அவருக்குக் கைகொடுத்தது. “தாய் கழகத்துக்குத் திரும்பி விட்டேன்” என்று உருகி, அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் இணைந்த ஓபிஎஸுக்கு,…
“உணவு பாதுகாப்பு என்பது அனைவரின் உரிமை” – திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் உணவுகளை நம்பியே தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும், சரியான எடையுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆனால், சமீபகாலமாகப் பல்வேறு உணவகங்களில் அனுமதிக்கப்படாத சமையல் பொருட்கள் மற்றும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இவற்றை அறிவியல் பூர்வமாகப் பரிசோதித்து, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க…
பாஜகவின் நிழல் ஆட்சியா தவெக ஆட்சி? – அமைதியின் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள்!
தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. “புதிய மாற்றம் வரும், தொழில்துறை செழிக்கும்” என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக அரசு தனது செயல்பாடுகளில் வேகம் காட்டாமல் கோட்டை விட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் மிக முக்கியமானது புதிய தொழில் முதலீடுகள். ஆனால், தவெக ஆட்சி…
பழனி அருகே சினையாடு திருடி கொன்ற நபர் கைது: இருசக்கர வாகனத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!
பழனி, ஜூலை 29: பழனி அருகே வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த சினையாட்டைத் திருடிச் சென்று கொன்ற நபரை, ஆட்டின் உரிமையாளர் அவரது தம்பியுடன் சேர்ந்து துரத்திப் பிடித்து ஆயக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, பூலம்பட்டி அஞ்சல், வேப்பன்வலசு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கேப்டன் பிரபாகரன் (36). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், தனது வீட்டில் 2 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று (ஜூலை 28) இரவு சுமார் 09.00 மணியளவில், வீட்டின்…
