Headlines
பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் :

பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் :

ஆக் 27, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கம்போல் பண்டிகை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன் அத்தம் நட்சத்திரத்தன்று விழா நடைபெறும் மரபின்படி, இன்று அரண்மனையில் அத்தப்பூ கோலம் போடப்பட்டது. இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பாரம்பரிய முறையில் ஓணம் கொண்டாட்டத்தை துவக்கினர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வருக்கு “சிறந்த முதல்வர்” விருது !

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வருக்கு “சிறந்த முதல்வர்” விருது !

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 18: அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.சி. மகேஷ் அவர்களுக்கு, கல்விச் சேவையும் ஆளுமைத் திறமையும் பாராட்டி “சிறந்த முதல்வர்” விருது வழங்கப்பட்டது. இந்த விருது, கன்னியாகுமரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் வழங்கப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஏ. பிலிப்டன் விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ஆர். தர்மரஜினி, டாக்டர் ஜோசப் ரூபட் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். — பாவலர் ரியாஸ்குமரி மாவட்ட செய்தியாளர்

Read More
நாகர்கோவிலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி !

நாகர்கோவிலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி !

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நாகர்கோவில் இந்து கல்லூரியில் இருந்து தொடங்கி செட்டிகுளம் சந்திப்பு வரை நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் பொதுமக்கள் அதிகம்…

Read More
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஆக் 18, கன்னியாகுமரி அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 23 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெறும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, ஒப்பந்த அடிப்படையிலான ஓய்வூதிய…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பரபரப்புஒப்பந்தத் தொகை வழங்காததால் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் முயற்சி !

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பரபரப்பு !ஒப்பந்தத் தொகை வழங்காததால் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் முயற்சி !

ஆக் 18, திங்கள்நகர் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நேசமணி நினைவு சிறுவர் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த பணிக்கான ஒப்பந்தத் தொகை ரூ. 33 லட்சம். ஆனால், அந்தத் தொகையை பேரூராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒப்பந்ததாரர் தனது குடும்பத்தினர் உடன் கறுப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முனைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசும், பேரூராட்சி அதிகாரிகளும் நிலைமையை ஆராய்ந்து…

Read More
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மோதல் : 2 பேர் படுகாயம் !

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மோதல்: 2 பேர் படுகாயம் !

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடலில் பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற முட்டம் மற்றும் கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். “ஆட்சியர் வழங்கிய அனுமதி படி மீன்பிடித்த எங்களை தாக்கிய மீனவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் நாகர்கோவிலில் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால்…

Read More
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு :

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு :

ஆக் 16, கன்னியாகுமரி சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு மக்களை வாழ்த்தினார். உடன் இணை ஆணையர் திருமதி. ஜான்ஸிராணி, ஒன்றிய செயலாளர் திரு. பாபு, பேரூராட்சி தலைவர் திருமதி. னுஷியா தேவி, பேரூர் செயலாளர் திரு.சுந்தர், கோவில் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள்…

Read More