நாகர்கோவில்: அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர்கள்–நடத்துனர்கள் திடீர் போராட்டம்பயணிகள் கடும் அவதி – நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல்..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அரசு பேருந்து விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக வந்த தகவலை கண்டித்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு தவறு இல்லை என கூறப்பட்ட போதிலும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகரின் முக்கிய…
