“தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத, முதலமைச்ருக்கு ‘மதச்சார்பின்மை’ பற்றி பேசுவதற்கு, துளியேனும் தகுதியில்லை!”- திருநெல்வேலி பேட்டியில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கடுந்தாக்கு!
திருநெல்வேலி,டிச.21:- திருநெல்வேலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு, பதில் அளிக்கும் வகையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று (டிசம்பர். 21) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, திட்டவட்டமாக மறுத்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “மேடைகளில் மதச்சார்பின்மை குறித்தும், மகாத்மா காந்தி குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், அவர் உண்மையில் மதச்சார்பின்மையை கடை பிடிக்கிறாரா? என்பதை நான் ஒரு…
