திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 235 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 33 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 356 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில், 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், 50 புதிய பேருந்துகளை இயக்கி வைத்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்!
திருநெல்வேலி,டிச.21:-தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( டிசம்பர்.21) காலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற, பிரம்மாண்டமான அரசு விழாவில் பங்கேற்று, 694.02 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் உரையாற்றினார். சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த விழாவில், 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், முதலமைச்சர் வழங்கினார். அத்துடன் 50 புதிய பேருந்துகளையும் அவர்…
