நேர்முக உதவியாளரா இல்லை மறைமுக எதிர்கட்சிகாரரா ?
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஐ.பி.செந்தில்குமாரின் நேர்முக உதவியாளராக இருந்து வருபவர் லோகு என்ற லோகநாதன். பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் திமுக கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ செந்தில்குமார் கலந்து கொண்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். அரசு மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு தகவல் வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட நேர்முக…
