தமிழ்நாடு
மதுரையில் நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவதால் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்.!
மதுரை இதய பகுதியாக இருக்கும் பெரியார் பேருந்து நிலையம் அருகே நோ பார்க்கிங் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள் இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது மதுரை மாநகர காவல் துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி
நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாளை கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரும் நிகழ்ச்சியும், பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தாராபுரத்தில் சமபந்தி அன்னதான விழா நடைபெற்றது.
தாராபுரம் கொண்டரசம்பாளையம், வலையக்காரர் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வீரக்குமாரசுவாமி திருக்கோயில் திருவிழா. உடுக்கை பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது. சுமார் 150 க்கும் மேற்பட்ட கிடா விருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கிடா விருந்தில் கலந்து கொண்டு சாதிகள் மறந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி சமபந்தி அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சிதலைவர் லட்சுமிபவ்யா தண்ணீரு அதிரடியாக நகராட்சி சந்தை அருகில் அமைந்திருக்கும் கடைகளி்ல் சோதனை மேற்கொண்டார்.
மேற்கண்ட சோதனைகளில் மொத்தம் 12 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக ரூ.30 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது உதகைவருவாய் கோட்டாட்சியர் சதிஷ்,உதகை நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லிபாபு,உதகை நகர்நலஅலுவலர் மரு.சிபி, உதகை வட்டாட்சியர் சங்கர்கனேஷ், உள்பட பலர் உடன் இருந்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி M.C.A., MLA.,அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடுஅரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சசெல்லம்பட்டு ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளியில் நூற்றாண்டுவிழா (1919 – 2025) மற்றும் #ஆண்டுவிழா (2024 – 2025) & அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டுவிழா (1913 – 2025) மற்றும் #ஆண்டுவிழா (2024 – 2025) & சங்கராபுரம் (இந்து) #ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா (1880-2025) மற்றும் ஆண்டுவிழா 2025 & சுகுளத்தூர்…
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாஸ் கிளீனிங் பணி.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா I. P. S. அவர்களின் தலைமையில், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு , ADSP சௌந்தரராஜன், ADSP மணிகண்டன், எஸ்பி ஆய்வாளர் சுஜாதா மற்றும் காவலர்கள் குழு, இவர்களுடன் நகராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து , புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலிருந்து, சேரிங்கராஸ் காந்தி சிலை வரை மாஸ் கிளீனிங் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் குழுவின் இந்த சமூக பணிக்கு,…
தென்காசிஅரசு மருத்துவமனையில் குழந்தை இறந்ததால் – போராட்டம்.! மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கம்.!
தென்காசி, மார்ச் – 02 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை அரை மணி நேரத்தில் இறந்தது இதனால் குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் விளக்கம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம், பாட்டப்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட துவரன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் வசந்தகுமார்(வயது 35) இவர் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பாரதி (வயது 30) இவர்களுக்கு இரண்டு பெண்…
வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு.
மதுரை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி மாடு வளர்க்க ரூ.500 கட்டணம் குதிரை வளர்க்க ரூ.750 கட்டணம் ஆடு வளர்க்க 150ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணம் நாய், பூனை வளர்க்க 750 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர் சின்னத்தம்பி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள சிவனுக்கு சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சங்கராபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் வாசவி கிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா சார்பில் பூஜை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் வாசவி கிளப் தலைவர் G.பாலாஜி, செயலாளர் N.பாலாஜி, பொருளாளர் T.கிஷோர் குமார் மற்றும் வாசவி கிளப் வனிதா தலைவி ஜெய்சக்தி பாலாஜி, செயலாளர் திவ்யா பாலாஜி, பொருளாளர் பத்மாவதி கிஷோர் குமார்,அதனைத் தொடர்ந்து ZC கமலக்கண்ணன், IPC தீபா சுகுமார், IPC கருணாகரன் மற்றும்…
புளியங்குடியில் பரபரப்புசாலையில் மஞ்சள் பையில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 லட்சம்போலீசில் ஒப்படைத்த விவசாயி.
தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன்புதுக்குடி கற்பகவீதி 1வது தெருவை சேர்ந்தவர் தங்கச்சாமி (50) விவசாயி. இவர் தனது மனைவி ஜோதியுடன் விவசாய பணிக்காக டிஎன்.புதுக்குடி மேற்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது மஞ்சள்நிற பை சாலையில் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை பார்த்தார். இதையடுத்து மஞ்சள் பையை எடுத்து பார்த்தபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பையில் ரூ.500 நோட்டு கட்டாக இருப்பதை கண்டார். இதனை தவற விட்ட நபர்…
