தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார் கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த்.
அக். 25, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் முழு கொள்ளளவான 46 அடியை எட்டியுள்ள நிலையில் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் கலெக்டர் எம்.எஸ். பிரசாந்த் உடன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் வெள்ளாறு வடி நிலக்கோட்ட பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர்கள் விஜயகுமார், பிரபு, மாதவன், பிரசாத், மற்றும் பாசன சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். புதிய…
உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் 248 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 248 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ.மணிக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வராணி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் செல்வம் டேனியல்ராஜ், மற்றும் நகர மன்ற…
உடுமலையில் ஆடிட்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது 15 பவுன் நகை பறிமுதல்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஏரிப் பாளையம் சேகர்நகர்பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (49).இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி இன்று வீட்டை பூட்டிக் கொண்டு தண்டபாணி மற்றும் அவரது மனைவியும் வெளியே சென்று விட்டனர்.இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடி சென்று விட்டனர். பின்னர் மதியம் தண்டபாணி வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று…
பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை- தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர்.
அக்டோபர் : 23-திண்டுக்கல் மாவட்டம் பழனி முல்லை நகரில் வசித்து வருபவர் இளங்குமரன். பழனியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி மேல்கரைபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தேன்மலர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் வினித் கோயம்புத்தூரில் உள்ள சாப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் வீட்டிலிருந்த இளங்குமரன், அவரது மனைவி ரேணுகாதேவி மற்றும் மகள் தேன் மலர் ஆகிய மூவரும் நீண்ட…
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் கஞ்சா வியாபாரிகள் நான்கு பேரை மடக்கி பிடித்த சிறப்பு படை போலீசார் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி உத்தரவின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு படை வீரர்கள் மூலம் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் சிறப்பு படைப்பு போலீசார் எம்.குன்னத்தூர்.கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கு இளைஞர்கள் சிலர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை சிறப்பு படை போலீசார் கண்காணித்து…
உடுமலையில் கனமழைகுடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர்.
அக்டோபர் : 22 – உடுமலையில் இன்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கே சி பி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள காலியிடங்களில் மழை நீர் தேங்கி தவளை கள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. தவளைகள் சத்தத்தால் குடியிருப்போர் மிகவும் அவதிப்பட்டனர். இதேபோல் விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது….
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் , காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழரின் விருந்தோம்பல் பண்பை தெரிந்து கொள்வதற்கும், நம் பாரம்பரிய பண்பாட்டின் உணவு கலாச்சாரத்தின் பயன்களை அறிந்து கொள்வதற்கும், இன்று 22.10.2024 உணவு திருவிழா நடைபெற்றது. இதில், பெரும்பாலும் நெருப்பை பயன்படுத்தாமல் நெருப்பில்லா சமையல் என்ற தலைப்பில் சமூக அறிவியல் மன்றம் சார்பில் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் ஆசிரியர் சையது முகமது குலாம்தஸ்தகீர் வரவேற்புரை…
அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் பழனியில் நடை பெற்றது…
பழனி : அக்டோபர் 21 – திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ல் தமிழக அரசால் 39 பேருக்கு இலவச பட்டா மனை வழங்கப்பட்டது. பட்டா வழங்கியதில் 14 நபருக்கு இடத்தை பிரித்து வழங்கப்பட்டது. அதிலும் குளறுபடிகள் இதுவரை பட்டா வழங்கிய நபர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. கடந்த அக்டோபர் 07 ம் அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர். புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பது.திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பழனி வட்டம் கோதை மங்கலம்…
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த ஏராளமான ஜோடிகள் இலவச திருமணத்திற்கு அபிராமி அம்மன் கோவிலில் விண்ணப்பித்திருந்தனர் இதில் 14 ஜோடிகளில் பரிசீலிக்கப்பட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலில்இலவச தங்கத் தாலி உள்பட பல்வேறு வகையான சீர்வரிசைகள் வழங்கி ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு உணவளித்து திருமணம் கொலாளமாக நடைபெற்றது. திண்டுக்கல் நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் திருத்தலம் உள்ளது இந்த திருத்தலம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில்…
தென்காசியில் வாரிசாக ஏற்க மறுத்த இரண்டாவது திருமணம் செய்த தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
தென்காசி அக்டோபர் – 21 -தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரின் தந்தையான சண்முகையா என்பவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டேவிட் என்பவர் தன்னை வாரிசாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சண்முகையாவிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தனது தந்தையை கொலை செய்த குற்றத்திற்கு இறந்து போன சண்முகாவின் மனைவி மாரியம்மாள் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு கொடுத்த புகார் மனு விசாரிக்கப்பட்டு…
