தமிழ்நாடு
ரங்கப்பனூர் கிராமத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டி பூமி பூஜை நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் பொது நிதியிலிருந்து மதிப்பிடு 15,34,492 இலட்சம் SAMRAT WATER MANEGEMENT SYSTEM ரங்கப்பனூர் கிராமத்தில் 5 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தாணியங்கி கட்டுப்பாட்டு கருவி பொறுத்த பூமி பூஜை போடப்பட்டது. இதில் நாமக்கல் இந்தக் கருவியின் நிறுவனத்தர் குபேரலட்சுமி என்டர்பிரைஸ் அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் அவர்கள் ஊராட்சி செயலர் திருமால்வளவன் அவர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட…
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! நேரடியாக பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மேயர்!
திருநெல்வேலி,நவ.5:-நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.5] மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் கோ.ராமகிருஷ்ணன் நேரடியாக பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்களை பெற்றார். பாதாளச்சாக்கடை கழிவுநீர் மூடியின் மேற்பாகம் வழியாக கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்! பொது நல்லியில் அடைப்பை நீக்கி, சீரான குடிநீர் விநியோகம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்! கழிவுநீர் தடுப்பு சுவற்றினை, இன்னும் 2 அடி உயர்த்த வேண்டும்! ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட…
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நாங்குநேரி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளில், தொகுதி மேற்பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்! முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பங்கேற்பு!
திருநெல்வேலி,நவ.5:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாவட்ட திமுக நிர்வாகிகள்,ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆகியோருடன், தொகுதி மேற்பார்வையாளர் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம், இன்று [நவ.5] மூலக்கரைப்பட்டியில்நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளரும்,தமிழக முனானாள் சபாநாயகருமான ஆவுடையப்பன், தலைமை வகித்தார்.சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளரும், முன்னாள் அமைச்சருமான என். சுரேஷ் ராஜன் முன்னிலையில் நடைபெற்ற, இந்த கூட்டத்தில், மாவட்டபொருளாளர் எம்.எஸ்.எஸ். ஜார்ஜ் கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கே. சித்தீக், மாநில அணி நிர்வாகிகள்”ஆவின்” எம்….
திருநெல்வேலியில், தமிழ் அறிஞர் கா.சு.பிள்ளையின், 136-வது பிறந்த தினவிழா! திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த நெல்லை மேயர்!
திருநெல்வேலி, நவ : 5:- தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழ் அறிஞரும், சைவ சித்தாந்த வல்லுநரும், சிறந்த வழக்கறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும், பன்மொழிப் புலவருமான கா.சு.பிள்ளை என்றழைக்கப்படும் காந்திமதிநாத சுப்பிரமணிய பிள்ளையின், 136 -வது பிறந்த நாள், இன்று [நவ.5] தமிழ்ச்சான்றோர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி நெல்லை மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கா.சு.பிள்ளையின், நினைவுத்தூணுக்கும் [ஸ்தூபிக்கும்], திருவுருவப்படத்திற்கும்நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மேலப்பாளையம் மண்டல தலைவி கதீஜா இக்லாம் பாசிலா, கா.சு.பிள்ளையின் பேரன் சுப்பிரமணியன்,…
பழனி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி பூங்காவை பராமரிப்பு பணிகளுக்காக அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. நகரின் மத்தியில் அமைந்துள்ள வ.உ.சி மத்திய பேருந்துநிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற பழனி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பூங்காவானது பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்றது. பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள்…
சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் பாதி்ப்பு !
ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது., வீட்டின் உரிமையாளர் பரமசிவம் அதிகாரிகளுடன் வாக்குவாதம். நெய்காரபட்டி பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவருடைய வீட்டிற்கு முன்பாக செல்லும் கழிவுநீர் சாக்கடை கால்வாயை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அடைத்து வைத்ததால் கழிவுநீர் வழிந்து சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் பரமசிவம் என்பவரிடம் பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் ,…
எலவனாசூர்கோட்டை எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை எல் ஜோசப் ராஜ் ஏற்பாட்டில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜவேலு எறையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆசிர்வாதம் ஆகியோர்களை வரவேற்றார். மேலும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு…
வனத்துறை தொடர்பான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்றது.
வனச்சரக அலுவலர்கள் மணிகண்டன் (உடுமலை) புகழேந்தி(அமராவதி) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உடுமலை,மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.அப்போது விவசாயிகள் கூறுகையில், வனவிலங்குகளில் குரங்கு, மயில்,காட்டுப்பன்றி உள்ளிட்டவை மலை அடிவாரம் மற்றும் சமதளப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது.குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை மரங்களில் இளநீர் மற்றும் குரும்பைகள் உள்ளிட்டவற்றை பிடுங்கி கீழே போட்டு விடுகிறது. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போன்று பல லட்சம் ரூபாய்…
உடுமலை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!
உடுமலை அருகே பெரிய கோட்டை பிரிவிலிருந்து மருள்பட்டி கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.இந்த சாலையின் குறுக்காக ரெயில் பாதை உள்ளதால் அதை கடந்து செல்வதற்கு ஏதுவாக சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவது தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும்போது மாற்று வழியை தேடி அலைய வேண்டிய சூழல்…
உடுமலையில் இணைப்பு சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி சாலையை பாதுகாக்கவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை!
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.அதை வெளியேற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் கழிவு நீர் கால்வாயில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஒரு…
