கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைசி ஆடி வெள்ளி மற்றும் ஆடிப் பூரம் பண்டிகையை முன்னிட்டு, புதிய தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ரெணகாளியம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. இப்பண்டிகையை முன்னிட்டு இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினரின் உபயத்தில், கோயிலுக்கு வருகை தந்த சுமார் ஆயிரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாத பைகள் வழங்கப்பட்டனர் மேலும்கோயில் நிர்வாகத் தலைவர் செல்வராஜ் தலைமையில்…
