குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட வகுப்பறைத் திறப்பு: நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவரே உரை!
மடத்துக்குளம்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம், குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த வகுப்பறை கட்டிடத்தைத் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பள்ளியின் நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவரே கலந்துகொண்டு பேசியதாவது:“குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தனது 100-வது ஆண்டைக் கொண்டாடுவது மிகுந்த பெருமைக்குரிய நிகழ்வாகும்….
