தமிழ்நாடு
நீலகிரி மாவட்ட திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.!
நீலகிரி மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிள் கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், கழக தேர்தல் பணி செயலாளர் – அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் போஜராஜ், சி.பி.எம் செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர்…
திருநெல்வேலி மேலப்பாளையத்தில், மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த, “நலம் காக்கும் ஸ்டாலின்!” திட்ட, சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!
திருநெல்வேலி,நவ.8:- முதலமைச்சர் முக ஸ்டாலின், இந்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில், அறிமுகம் செய்த “நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், ஒவ்வொரு சனிக்கிழமையும், காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரையிலும், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையாகிய இன்று (நவம்பர்.8),நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் உள்ள, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில்”நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், நடைபெற்றது….
உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுகுமார்! ஒரே நேரத்தில், மொத்தம் 2 லட்சம் மீன் விரலிகளை, இருப்பு செய்திட இலக்கு!
திருநெல்வேலி,நவ.8:- தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின், திருநெல்வேலி மாவட்ட அலுவலகம்,ஒன்றிய அரசின் “பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா” ( PRADHAN MANTRI MATSYA SAMPADA YOJANA- PMMSY) ஆகியவற்றின் சார்பாக, நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இன்று (நவம்பர். 8) காலையில், குறுக்குத்துறை முருகன் கோயில் படித்துறையில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி…
“யாசகம் கேட்பவர்களை போல கையேந்தி நிற்க வேண்டிய நிலை” – உயர்நீதிமன்றம்..
சாலைப் பணிகளுக்காக நிலம் தந்தவர்கள் யாசகம் கேட்பவர்களை போல கையேந்தி நிற்க வேண்டிய நிலை உள்ளது; இது ஏற்கத்தக்கது அல்ல. அன்று ஒரு சவரன் நகை 30,000 ரூபாய்; இன்று 97,000 ரூபாய். திண்டுக்கல்லை சேர்ந்த 30 பேர் 2017ல் தங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு கோரி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து. மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.
நாகர்கோவில் நடைபாதை அமைக்கும் பணி – அரசு ஒப்பந்தக்காரரின் பாகுபாடு குற்றச்சாட்டு!
நாகர்கோவில்; 08 நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட செட்டிக்குளம் சந்திப்பிலிருந்து கோட்டார் சவேரியார் தேவாலயம் சந்திப்பு வரை, பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சாலையின் இருபுறங்களிலும் நடைபாதை மற்றும் அலங்காரக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளில் சிறு, பெரிய வியாபாரிகள் பலர் தங்களது கடைகள் மூலம் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது நடைபெற்று வரும் நடைபாதை பணிகள் மந்தமாகவும், அலட்சியமாகவும் நடைபெறுவதால், பல கடைகளின் வாசல்கள் சேதமடைந்து, வியாபாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், அன்னம் ட்ரேடர்ஸ்…
திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் 1,00,000 மர விதைகள் தூவ, 27,000 விதை பந்துகள் உருவாக்கி சாதனை படைத்த, தாழையூத்து சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள்!
திருநெல்வேலி,நவ.7:-திருநெல்வேலி மத்திய மாவட்டம், தழையூத்து சங்கர் நகர், சங்கர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் சொ. உடையார் முன்னிலையில், தேசிய பசுமை படை மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செல்வன், குடிமக்கள் நுகர்வோர் மன்ற உதவி திட்ட அலுவலர் லேகா ஆகியோரின் ஒருங்கிணைப்பில், மாணவ மாணவியர் 1,00,000 மர விதைகள் அடங்கிய, 27,000 விதை பந்துகளை வீடுகளில்…
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்!மேற்பார்வை பொறியாளர் நேரடியாக பங்கேற்று, குறைகளை கேட்டறிந்தார்!
திருநெல்வேலி,நவ.7:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக (TNPDCL) திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் மின் கோட்ட “மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம்” வள்ளியூர் “செயற்பொறியாளர்” அலுவலகத்தில், இன்று (நவம்பர்.7) காலையில் நடைபெற்றது. திருநெல்வேலி வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேசுவரி, தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, மின் பயனீட்டாளர்கள் அளித்த மனுக்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு, வள்ளியூர் கோட்ட செயற் பொறியாளர், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில்,…
திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்தல் தொடர்பான, சிறப்பு ஆய்வு கூட்டம்! நெல்லை மாவட்டத்துக்கான, கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழக ( TIDCO) மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு!
திருநெல்வேலி,நவ.7:- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர்.7) காலையில், இம்மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக (TIDCO) மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் முன்னிலையில், சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்று வரும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பருவமழைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக, மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன், கலந்தாய்வு நடைபெற்றது….
மணக்குடி இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்..பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் முயற்சியில் தொடங்கிய பணி..
மணக்குடி; 07 கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி மற்றும் கீழமணக்குடி கடற்கரை கிராமங்களை இணைக்கும் பாலம் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் கடுமையாக சேதமடைந்தது. அதன் பின்னர் பலமுறை பழுதுபார்க்கப்பட்டாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக முழுமையாக பயன்பாட்டுக்கு அமையாமல், உடையும் நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையிலே, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்து, பழுதடைந்த பாலத்தை அகற்ற கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, குமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த்…
“புரட்சி பாரதம்” கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா…
விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த புரட்சி பாரதம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளராக ருசேந்திரகுமாரை அறிவித்த கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் தெற்கு தமிழரசன், வடக்கு கஜேந்திரன், தென்மேற்கு திருநாவுக்கரசு, தென்கிழக்கு தியாகராஜன் தலைமை தாங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள் வடக்கு கோவிந்தன், கிழக்கு ஏழுமலை, தெற்கு ராஜா அன்பரசு, கடலூர் மாவட்டச்செயலாளர்கள் கிழக்கு சங்கரலிங்கம், வடக்கு விக்கிதுரை, மாநகர் முகேஷ் மூர்த்தி முன்னிலையில்…
