தமிழ்நாடு
ஆம்பூர் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி பிரேக் போட்டதால், கண்டெய்னர் லாரி மற்றும் மொரம்பு ஏற்றி வந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. போக்குவரத்து பாதிப்பு.
வாணியம்பாடி, அக்.19- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் ஆம்பூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டைனர் லாரி முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் பின்னால் கதவாளம் பகுதியில் இருந்து மொரம்பு மண் ஏற்றிக்கொண்டு மாதனூர் நோக்கி சென்ற லாரி அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் கன்டெய்னர் லாரி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும், மொரம்பு மண் ஏற்றி வந்த லாரி எதிர் திசையில் சென்று சென்னை பெங்களூர் தேசிய…
பழனியில் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பளியர் இன மக்கள் !…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த குதிரையாறு அணை மற்றும் புளியம்பட்டி ஆகிய மலை கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றன தொடர்ந்து மலை கிராமங்களில் வசித்து வரும் பொது மக்களுக்கும்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வருவாய்த் துறையின் மூலம் பளியர் இன சாதி சான்று வழங்க வேண்டும் என்று பலமுறை விண்ணப்பம் செய்து தொடர்ந்து வருவாய் துறையினர் விண்ணப்பங்களை நிராகரித்து வருகின்றனர். இதனால் பள்ளிகளில் மாணவ மாணவிகள் படிக்க முடியாமல்…
பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை!
பழனியருகே அ. கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் மேற்கூரை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் எந்த நேரத்தில் மேற்கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து மேலே விழும் என்ற உயிர் பயத்தின் அச்சத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவிற்கு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் முதல் பருவத்தேர்வு, காலாண்டு தேர்வில் சிறப்பாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர் சையது முகமது குலாம்தஸ்தகிர்…
பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன் அடிப்படையில் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் ,கீரனூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கோதை மங்கலத்தைச் சேர்ந்த அம்ஜத் கானிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 16 கிலோ அளவுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்…
பழனியில் அப்துல் கலாம் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக மரம் நடு விழா…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாமின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து இரயில்வே நிலையம் வரை 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வனிகர் சங்க மாவட்ட தலைவர் ஜே பி சரவணன், சரவனபொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை…
கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரவள்ளி கிழங்கு கொள்முதல் விலையை குறைத்து இருப்பதை கண்டித்தும், மரவள்ளி கிழங்குக்கு நியாயமான விலை கிடைத்திடவும், கள்ளக்குறிச்சியில் சேகோ பேக்டரி அமைத்து தரக்கோரியும் மனு அளித்தனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பாயிண்ட்டுக்கு ரூபாய் 350 முதல் 400 வரை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு டன் கிடங்கு கொள்முதல் பத்தாயிரம் முதல் 12 ஆயிரம் வரை பெற்று வந்தனர் . இந்த நிலையில் தற்போது ஒரு பாயின்டின் விலை…
திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் தேர்வு.
திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்களை தமிழக அரசு G.O. (D). 59/2024 ன்படி தேர்வு செய்துள்ளது அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப., அவர்களை மாவட்ட அரசு காஜி மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் மரியாதை நிமித்தமாக காஜி கமிட்டி குழுவுடன் சந்தித்து சால்வை போர்த்தி நினைவாக தமிழ் குர்ஆன் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட அரசு காஜி…
வியக்க வைக்கும் மாமனிதர் சந்திரசேகர்.
தென்காசி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சமூக ஆர்வலரான இவர் பனை விதை நடும் நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை தம் சொந்த முயற்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளார். எவ்விதமான உதவியும் எதிர்பார்த்து செய்யாமல் தனது மன மகிழ்விற்காக இப்பணிகளை செய்து வருகிறேன் என்று கூறி வரும் இவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் பனை விதை நடுதலில் அவரின் ஆர்வம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது பொதுமக்களின் நலனுக்காக பனைமரம்…
பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்.
பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வருகை புரிந்தார். தனித்தனியாக வந்த இருவரும் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விஜயதசமிக்கு வாழ்த்து சொன்னது வரவேற்கத்தக்கது. இந்து மக்கள்…
