Headlines
மதுரை கே.புதூர் மூன்றுமாவடியில் செல்வகணபதி டிவிஎஸ் ன் பொங்கல் விழா கோலாகலம்

மதுரை கே.புதூர் மூன்றுமாவடியில் செல்வகணபதி டிவிஎஸ் ன் பொங்கல் விழா கோலாகலம்.

மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில், செல்வகணபதி டிவிஎஸ் நிறுவனத்தின் சார்பில் பொங்கல் திருநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா செல்வகணபதி டிவிஎஸ் நிறுவனரும் உரிமையாளரும் ஆகிய உயர்திரு பழனிதங்கவேல் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகை ஒட்டி புதிய வாகனங்களை விழாக் கால சலுகையில் வாகனங்கள் வாங்க மூன்றுமாவடி கே.புதூர் செல்வகணபதி டிவிஎஸ் கிளையில் வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் சென்று மகிழ்ச்சி அடைந்தனர். புதியப் பானையில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு நன்றி செலுத்தி, தமிழர்…

Read More
திருநெல்வேலியில் கோலாகலமாக நடைபெற்ற, "தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்" எம்.ஜி.ஆர். 109- வது பிறந்த தின விழா! திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய, அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலியில் கோலாகலமாக நடைபெற்ற, “தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்” எம்.ஜி.ஆர். 109- வது பிறந்த தினவிழா!திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய, அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலி,ஜன.17:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், தலைவருமான, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109- வது ஆண்டு பிறந்த தினவிழா, இன்று {ஜனவரி.17} தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான “எடப்பாடி” கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள, எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு, மாவட்ட செயலாளர் “தச்சை” என். கணேச ராஜா தலைமையில், “மலர் மாலை”…

Read More
திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், 'மொழிஞாயிறு' தேவநேய பாவாணரின், 45-வது ஆண்டு ‌நினைவு தினம் அனுசரிப்பு! நெல்லை மாநகர் மையப்பகுதியில், தேவநேய பாவாணருக்கு, வெண்கலசிலை நிறுவ கோரிக்கை!

திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ‘மொழிஞாயிறு’ தேவநேய பாவாணரின், 45-வது ஆண்டு ‌நினைவு தினம் அனுசரிப்பு! நெல்லை மாநகர் மையப்பகுதியில், தேவநேய பாவாணருக்கு, வெண்கலசிலை நிறுவ கோரிக்கை!

திருநெல்வேலி,ஜன.15:-‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும், ஞா.தேவநேய பாவாணர் சிறந்த தமிழ் அறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநரும், பன்மொழி புலவரும் ஆவார். 27 மொழிகளில், பேசவும் எழுதவும் திறன் பெற்ற இவர், மிக-மிக அரிய சிறப்பு மிக்க சொல்லாராய்ச்சி தொடர்பான, நிறைய நூல்களை எழுதியுள்ளார். இத்தகைய பெருமை மிக்க, ‘தமிழ் அறிஞர்’ ஆன, ஞா.தேவநேய பாவாணரின் 45-வது வது ஆண்டு நினைவு தினம், இன்று {ஜனவரி. 15} தமிழகமெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்ட ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்’ சார்பாக,…

Read More
நீலகிரி மாவட்ட உதகைமார்கட்பகுதியில் சமத்துவ பொங்கள்.

நீலகிரி மாவட்ட உதகைமார்கட்பகுதியில் சமத்துவ பொங்கள்.

மார்க்கெட்டில் இன்று தென்றல் காய்கறி வியாபாரிகள் சங்கம் முன்னெடுத்த சமத்துவ பொங்கல் பெருவிழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர்மு. கட்டாரி, மாவட்டத் துணைச் செயலாளர் மு தம்பி இஸ்மாயில். நகர பொறுப்பாளர் எடிசன் பிரபு, நகரத் துணைச் செயலாளர்கள் சேவியர் ரகுராம். தொழிலாளர் விடுதலை முன்னணி சேட்டு.மகளிர் விடுதலை இயக்கம் ரெபேக்கா, மற்றும் காந்தள் பகுதி பொறுப்பாளர்கள் இமான், அரவிந்த், உள்ளிட்டோர் கலந்து கொண்டு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் கட்சிப் பொறுப்பாளர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம்…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செண்பகராமன்புதூரில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டுவண்டிப் பந்தயத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரா. மகேஷ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். திமுக மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் அவர், தமிழர்களின் வீர விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர், இதனைப் பொதுமக்கள் திரளாகக் கூடி உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Read More
ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? - நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? – நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

கன்னியாகுமரி, ஜனவரி 16: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சூழலியல் மற்றும் ஆரோக்கியக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அந்நிறுவனத்தின் திட்டங்களை முன்னின்று நடத்துவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மணல் தோண்டி எடுக்கப்பட்டு கதிரியக்க தாதுக்கள் பிரிக்கப்படும் செயல்பாடுகளால் கடல் அரிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் விவசாய நிலங்கள் பாழாவது போன்ற…

Read More
நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில் ராமன்புதூரில் நேற்று (ஜனவரி 15) இரவு தனியார் அறக்கட்டளை சார்பில் 7-ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், ‘நிமிர்’ குழுவில் இணைந்து பொதுமக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்றிய பெண் காவலர்கள் ஜெயந்தி, ஆஷா பிரியா மற்றும் சுமதி அவர்களுக்கு, அவரது சேவையைப் பாராட்டி “சமூக சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. இந்த விருதினை மருத்துவர் நாகேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். காவல்துறைப் பணியுடன் சமூகப் பங்களிப்பிலும் சிறந்து விளங்கும் பெண்…

Read More
திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்திய, மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்திய, மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி,ஜன.13:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று ( ஜனவரி.13) மாலையில், மாநகர காவல் ஆணையர் “முனைவர்” நெ.மணிவண்ணன் தலைமையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநகரில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் புலன் விசாரணைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள்…

Read More
பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டில் (சிவ சத்தியா வீடு முதல் ராமசாமி கமலம்மாள் வீடு வரையிலான பகுதி) கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. வழக்கமாக பொந்துபுளி கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், காவலப்பட்டியில் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக…

Read More
2025 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44வது(SRMEU) மாநாடு

2025 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44வது(SRMEU) மாநாடு.

2025 டிசம்பர் 12, மற்றும் 13,ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44,வது பொதுக்குழு கூட்டத்தில் முன்மொழிவு பட்ட தீர்மானங்களின் பட்டியல்* 1)அனைத்து பாதுகாப்பு துறை பொதுத்துறை நிறுவனங்கள் ரயில்வே மற்றும் பிற மத்திய அரச நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புதல். 2) ஏழு ராணுவ தளவாட உற்பத்தி மையங்களை தனியார் நிறுவன மையம் ஆக்குவதற்கான உத்தரவை திரும்பப் பெறுதல். 3) ஒப்பந்த ஆட்சேர்ப்பு ரத்து செய்து காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேண்டும். 4…

Read More