தமிழ்நாடு
Dhai Akhar கடிதம் எழுதும் போட்டியை ஆண்டுதொரும் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறை.
இந்திய அஞ்சல் துறை அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்களிடமும், மக்களிடமும் ஊக்குவிக்கும் விதமாக Dhai Akhar கடிதம் எழுதும் போட்டியை ஆண்டுதொரும் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குகிறது. கடந்த வருடத்திற்கான 2024-2025 கடிதம் எழுதும் போட்டியில் பழனி அக்ஷயா அகாடமி பள்ளியை சார்ந்த மாணவி செல்வி. V தரணி ஸ்ரீ அவர்கள் 18 வயதுக்குட்பட்டவருக்கான அஞ்சல் உறையில் கடிதம் எழுதும் பிரிவில் மாநில அளவில் இரண்டம் இடம் பெற்றார். போட்டியில் வெற்றி…
குற்றாலம் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு.
தென்காசி மே – 24 தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள குற்றாலம் பகுதிகளில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் உள்பதி பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பிரதான அருவி புலி அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அனைத்து பகுதிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக குளிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….
சிம்ஸ் பூங்காவில் பூங்காவில் 131 ஆண்டு பழமை வாய்ந்த மரம் அதிக காற்று வீசியதின் காரணமாக நடைபாதையில் முறிந்து விழுந்தால் பரபரப்பு
பழ கண்காட்சி இன்று நடைபெறும் நிலையில் சிம்ஸ் பூங்காவில் மிகவும் பழைமையான ராட்சத மரம் பாதிப்பு நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில்இன்று 65 ஆவது பழ கண்காட்சி நடைபெறுகின்றது இந்த நிலையில் பூங்காவில் நூற்றாண்டு பெருமை கொண்ட 131 ஆண்டு பழமை வாய்ந்த ராட்சதமரம் அதிக காற்று வீசியதின் காரணமாக நடைபாதையில் முறிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது குன்னூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரத்தை அறுத்து அகற்றும் பணியில்…
கதண்டு வண்டு கடித்து இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமத்தில் மேல் தெருவில் ஒரு வீட்டில் கதண்டு வண்டு இரண்டு கூடு கட்டி கூட்டில் பல்லாயிரம் கணக்கான வண்டுகள் மண் தும்பைக்குள் வீட்டின் உரிமையாளர் கண்டுகொள்ளாத இருந்த போது மண் தும்பைக்குள்ள இருந்து வண்டுகள் வெளியேறி சுற்றியுள்ள வீடுகளுக்கும் புகுந்து அப்பகுதி மக்களை கடித்து இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புகார் இன் அடிப்படையில் களமருதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக தீயணைப்புத்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.
புளியம்பாறையில் இருந்து ஆமைக்குளம் கல்லூரிக்கு செல்லக்கூடிய சாலையின் குறுக்கே ஓடக்கூடிய நாரங்கா கடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஒப்புதல் கொடுத்து நிதி ஒதுக்கிய பின்பும் இன்னும் பணி தொடங்காமல் இருக்கின்றது என்ற காரணத்திற்காக. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் இன் புளியம்பாறை கிளை செயலாளர் தோழர் சுபைர் அவர்கள் தலைமையில் கட்சி தோழர்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்து.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சியில் “கன்னிகாதேவி காலணி” “கன்னிகாதேவி நகர்”-ஆக பெயர் மாற்றம்..
கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதல்படி… குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி நகராட்சி கன்னிகா தேவி காலணியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு. கா ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர் திரு.கே.எம்.ராஜு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி நகராட்சி (பொ)ஆணையாளர்…
பேருந்து வசதியும் இல்லை இருக்கின்ற தார்சாலையும் பழுது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை சாலை அமைத்து தரக்கோரி ஊர் பொதுமக்கள் கோரிக்கை.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி இந்திரா நகர் என்னும் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை அமைத்து ஆறு வருடங்கள் ஆகிறது இப்பொழுது அந்த சாலை குண்டும் குழியுமாகி மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பேருந்து வசதியும் இல்லை அவசர உதவிக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கும் கூட மற்றொரு மாற்று வழியும் இல்லை இருக்கின்ற தார் சாலையும் பழுது நிலையில்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜோசப் பள்ளியில் கல்லூரி கனவு 2025 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜோசப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரசாத் தலைமையில் 12-ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு என்ன படிக்கலாம் என்ற கல்லூரி கனவு 2025 நிகழ்ச்சி ஜோசப் பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள் இதில் அரசு கல்லூரி பேராசிரியர்கள்.மற்றும் வட்டாட்சியர் கிராம அதிகாரிகள் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தினார்கள். கள்ளக்குறிச்சி…
வாணியம்பாடியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு வழங்கிய தீர்ப்பை ஆதரித்து திமுக-வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். வாணியம்பாடி,மே.14- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று நகர திமுக செயலாளர் வி. எஸ்.சாரதிகுமார் தலைமையில்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் B.தர்மத்துபட்டியில் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் B. தர்மத்துபட்டியில் அருள் மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை தெம்மாங்கு பாடகி திருமதி இராஜராஜேஸ்வரி யின் பாடல் கச்சேரியுடன் இவ்விழா வின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பிக்கப்பட்டது. குடங்களில் மாவிளக்கு அலங்காரம் செய்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலம் நடைபெற்றது. மற்றும் தெம்மாங்கு பாடகி திருமதி இராஜராஜேஸ்வரி யின் பாடலுடன் குத்துவிளக்கு பூஜை சிறப்பான முறையில் நடைபெற்றது. பக்த பெருமக்கள் பொங்கல் வைத்தல்…
