தமிழ்நாடு
விளையாட்டு பெயரில் வணிகம்? ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு, அதன் நடத்தும் முறையைச் சுற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆரோக்கியமான விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த நிகழ்வு, வணிக நோக்கங்கள் அதிகம் பிரதிபலித்ததாக சில பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டி-ஷர்ட்களில் நிறுவன விளம்பரங்கள் இடம்பெற்றதுடன், அரங்கம் முழுவதும் தற்காலிக கடைகள் (stalls) அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கட்டண வசூல் செய்யப்பட்டிருந்த போதிலும், குழந்தைகள் நீண்ட நேரம்…
மதுரை : 3 நாட்கள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கு திடீர் வேட்பாளரா? அது எப்படி சுந்தர்.சி? ‘குஷ்புக்கே 10 வருஷமா சீட் கிடைக்கல
‘‘உங்களிடம் சில கேள்விகள் கேட்டாகணும் மிஸ்டர் சுந்தர். நீங்க ஒரு சினிமா டைரக்டர். பரவாயில்லை வாங்க அரசியலுக்கு. ஆனா, எப்படி வந்தீங்க? மூன்று நாட்களுக்கு முன்னாடி வரையிலும் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு வேட்பாளர்னு அறிவிச்சதும் நீங்களே ஆச்சர்யப்பட்டீங்களா இல்லையா?* மூன்று நாள் முன்பு வரையிலும் மதுரை மக்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ, இந்திய அரசியலுக்கோ, எந்த பிரச்னையும் பற்றி பேசாமல், நான் சிறந்த டைரக்டர்னு சொல்லிக்கிட்டு இருந்த நீங்க, யாரோ அறிவிச்சதும், துண்டைப் போட்டுக்கிட்டு எம்எல்ஏ ஆகப்போறேன்னு வந்துருவீங்களா?…
ஊர்க்குருவியும் உள்ளூர் பருந்தும்: ஒரு ‘விசில்’ ரகசியம்!
நம்ம ஊர் பெரிய ஆலமரத்துக் கிளையில் கம்பீரமாக அமர்ந்திருந்தது உள்ளூர் பருந்து. அப்போது மூச்சிரைக்கப் பறந்து வந்து அதன் அருகில் அமர்ந்தது ஊர்க்குருவி. ஊர்க்குருவி: அண்ணே… பருந்து அண்ணே… ஒரு சூடான ‘மேட்டர்’ கிடைச்சிருக்குண்ணே! அப்படியே ‘கிரிஸ்பி’யான ஒரு நியூஸ்! உள்ளூர் பருந்து: என்ன குருவி, இறக்கை எல்லாம் இவ்வளவு படபடக்குது? மேலிருந்து பார்த்த வரைக்கும் ஊர் அமைதியாகத்தானே இருக்கு. அங்க கீழே என்ன விசேஷம்? ஊர்க்குருவி: வெளியில பார்க்கத்தான் அண்ணே அமைதி, ஆனா உள்ளுக்குள் பெரிய…
கனரக லாரி தடைக்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் குடும்பங்களுடன் உரிமையாளர்கள் முற்றுகை.
வாழ்வாதாரம் பாதிப்பு குற்றச்சாட்டு; அனுமதி இல்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் கனரக டாரஸ் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இணைந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, தடை காரணமாக வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும், வாகனங்களை மீண்டும் இயக்க…
வழக்கை வாபஸ் வாங்கு இல்லையேல் மகனை சிறையில் அடைப்பேன் – மதுரை காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்.
மதுரை : நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் முட்டை கடை நடத்தி ஒரு அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ராஜேஸ்வரி மற்றும் அவர் குடும்பத்தினரை தாக்கியுள்ளார்கள் இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விளக்கு தூண் காவல் நிலையத்தில் உள்ள விஜயகுமார் (SA) பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை வழக்கை வாபஸ் வாங்கு இல்லை என்றால் உனது மகனை சிறையில் வைத்து…
நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு உற்சாக வரவேற்புகட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி ஆதரவாளர்கள் பங்கேற்பு.
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ். ஆஸ்டின் அவர்களுக்கு 48வது வார்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக 48வது வார்டு வட்டக் கழக செயலாளர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் கட்சித் தொண்டர்களின் செயற்பாட்டை வெளிப்படுத்தியது. இந்த வரவேற்பு நிகழ்வில் வட்டக் கழக துணை செயலாளர் இப்ராஹிம், ஹாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜி பாபு, முன்னாள் எம்.சி. ஹாஜி பாபு ஆகியோரும்…
பொதுமக்கள் அறிவிப்பு : பழனி சட்டமன்ற தொகுதி குறைகளைத் தீர்க்க புதிய முயற்சி!
பழனி | [14.04.2026] பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், அவற்றுக்கு உரிய அதிகாரிகளின் மூலம் தீர்வு காணவும் புதிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் குரல் – தொகுதியின் தீர்வு! நமது தொகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சனைகள் மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளை பொதுமக்கள் தற்போது இந்தத் தளம் வாயிலாகப் பதிவு செய்யலாம். நீங்கள் அளிக்கும் புகார்கள் தொகுக்கப்பட்டு, ஊடகச் செய்திகளாக வெளியிடப்படும். மேலும், அவை…
அம்பேத்கர் 135: கன்னியாகுமரியில் விசிக மரியாதை நிகழ்வு.
வடசேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி; கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில், பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. வடசேரியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோபிபேரறாவாளன் தலைமையேற்றார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த கொள்கைகள் குறித்து சுருக்கமாக பேசப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்….
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை: தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பி பார்க்க வைப்போம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ள ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம் என்று தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 14-உலக குவாண்டம் தினம்.
உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களால் ‘உலக குவாண்டம் தினம்’ (World Quantum Day) கொண்டாடப்படுகிறது. அணுக்களுக்குள் இருக்கும் மிக நுண்ணிய துகள்களின் செயல்பாடுகளை விளக்கும் குவாண்டம் இயற்பியல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். இயற்கையின் அடிப்படை ரகசியங்களைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத் தொழில்நுட்பங்களான குவாண்டம் கம்ப்யூட்டிங், அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் மருத்துவக் கருவிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவாண்டம் மெக்கானிக்ஸில் மிக முக்கியமான மாறிலியான பிளாங்க் மாறிலியின்…
