Headlines
பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கந்தசஷ்டி விழா நேற்று மாலை 3 மணி அளவில் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் ஆறாம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடக்கமாக மலைக்கோயில் சின்ன குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கி வந்து அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோயில் நிர்வாகம் சார்பாக இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சூரசம்ஹார நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர்…

Read More
நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

பழனி நகராட்சியின் முக்கிய இடங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பாகவும், அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிகள் சார்பாக விளம்பர பிளக்ஸ் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயில் ரவுண்டானா, திண்டுக்கலில் இருந்து பழனி பேருந்துநிலையம் வரும் பிரதான சாலை, டிராவல்ஸ் பங்களா , EB கார்னர் போன்ற பல முக்கிய இடங்களில் அதிகமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. விளம்பர பேனர்களை வைப்பதற்கு நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்கு என சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….

Read More
பழனி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி பூங்காவை பராமரிப்பு பணிகளுக்காக அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி பூங்காவை பராமரிப்பு பணிகளுக்காக அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. நகரின் மத்தியில் அமைந்துள்ள வ.உ.சி மத்திய பேருந்துநிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற பழனி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பூங்காவானது பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்றது. பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள்…

Read More

சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் பாதி்ப்பு !

ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது., வீட்டின் உரிமையாளர் பரமசிவம் அதிகாரிகளுடன் வாக்குவாதம். நெய்காரபட்டி பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவருடைய வீட்டிற்கு முன்பாக செல்லும் கழிவுநீர் சாக்கடை கால்வாயை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அடைத்து வைத்ததால் கழிவுநீர் வழிந்து சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் பரமசிவம் என்பவரிடம் பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் ,…

Read More
பழனியை அடுத்துள்ள காவலபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது!

பழனியை அடுத்துள்ள காவலபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக மின்விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில் கிராம பொதுமக்கள் சார்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் நேரில் வந்து புகார் அளித்தால் மட்டுமே மின்விநியோகம் தடைபட்டுள்ளதை சரிசெய்ய முடியும் என்பதாக கூறியுள்ளனர். SS2 டிரான்ஸ்பார்மர் முழுவதுமாக பழுதடைந்துள்ளதை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக கூறிவந்த நிலையில் மின்வாரிய…

Read More
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முசுவனூத்து பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி(23) என்பவரை நிலக்கோட்டை காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்…

Read More
பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை- தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர்.

பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை- தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர்.

அக்டோபர் : 23-திண்டுக்கல் மாவட்டம் பழனி முல்லை நகரில் வசித்து வருபவர் இளங்குமரன். பழனியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி மேல்கரைபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தேன்மலர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் வினித் கோயம்புத்தூரில் உள்ள சாப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் வீட்டிலிருந்த இளங்குமரன், அவரது மனைவி ரேணுகாதேவி மற்றும் மகள் தேன் மலர் ஆகிய மூவரும் நீண்ட…

Read More
அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடை பெற்றது…

அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் பழனியில் நடை பெற்றது…

பழனி : அக்டோபர் 21 – திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ல் தமிழக அரசால் 39 பேருக்கு இலவச பட்டா மனை வழங்கப்பட்டது. பட்டா வழங்கியதில் 14 நபருக்கு இடத்தை பிரித்து வழங்கப்பட்டது. அதிலும் குளறுபடிகள் இதுவரை பட்டா வழங்கிய நபர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. கடந்த அக்டோபர் 07 ம் அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர். புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பது.திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பழனி வட்டம் கோதை மங்கலம்…

Read More
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த ஏராளமான ஜோடிகள் இலவச திருமணத்திற்கு அபிராமி அம்மன் கோவிலில் விண்ணப்பித்திருந்தனர் இதில் 14 ஜோடிகளில் பரிசீலிக்கப்பட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலில்இலவச தங்கத் தாலி உள்பட பல்வேறு வகையான சீர்வரிசைகள் வழங்கி ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு உணவளித்து திருமணம் கொலாளமாக நடைபெற்றது. திண்டுக்கல் நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் திருத்தலம் உள்ளது இந்த திருத்தலம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில்…

Read More
திண்டுக்கல்லில்,யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் 312 வது கிளையை இந்தியாவின் யுனிமணி இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் 63 வது மற்றும் இந்தியாவில் 312 வது கிளையை திறப்பது எங்களுக்கு பெருமையான தருணம்.இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நிதி சேவைகளை இன்னும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. திண்டுக்கல் அதன் துடிப்பான கலாச்சாரம், மற்றும் செழிப்பான பொருளாதாரத்திற்கு பெயர் பெற்றது.மேலும் அந்நிய செலாவணி சேவைகள், தங்க கடன்கள் அல்லது சுற்றுலா மற்றும் விடுமுறைகள் மூலமாக இருந்தாலும்,தொழில் முறை மற்றும் கவனிப்புடன் உங்கள் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்.இந்த புதிய கிளையானது,இந்த பகுதியின் வளர்ச்சியில் எங்கள் வலுவான நம்பிக்கையை குறிக்கிறது.மேலும் சமூகத்திற்கு சேவை செய்யவும் திண்டுக்கல் மக்களுடன் இணைந்து வளரவும், நாங்கள் எதிர் நோக்குகிறோம்.தொடக்க விழா உடன் தொடர்புடைய சி.எஸ்.ஆர் முன் முயற்சிகளின் ஒரு பகுதியாக யுனிமணி திண்டுக்கல் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடத்திற்கு மின்விசிறிகள், மற்றும் இரும்பு கட்டில்கள், திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகரவை மேல்நிலைப் பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவை வழங்குகிறோம்.இது போன்ற சமூக சேவைகளை இந்தியா முழுவதும் தொடர்ந்து செய்து வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் அனைவரும் எங்கள் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இந்த திறப்பு விழாவில் யுனிமணி தலைமை குழு மனோஜ் வி மேத்யூ, சதீஷ்குமார்,ரதீஷ் மற்றும் தேசிய வணிக தலைவர்கள் பிரகாஷ் பாஸ்கர், (அன்னிய செலாவணி), ஜான் ஜார்ஜ் (பயணம் மற்றும் விடுமுறைகள்) டைட்டஸ் (தங்க கடன்) மண்டல தலைவர்கள் கார்த்திகேயன் (தமிழ்நாடு தெற்கு), காஜா மைதீன்( மதுரை)ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிறைவில் கிளைத் தலைவர் தியாகராஜன் முனியாண்டி நன்றி கூறினார். இதில் வாடிக்கையாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில், யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் திறப்பு விழா.

திண்டுக்கல்லில்,யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் 312 வது கிளையை இந்தியாவின் யுனிமணி இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் 63 வது மற்றும் இந்தியாவில்312 வது கிளையை திறப்பது எங்களுக்கு பெருமையான தருணம்.இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நிதி சேவைகளை இன்னும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. திண்டுக்கல் அதன் துடிப்பான கலாச்சாரம், மற்றும் செழிப்பான பொருளாதாரத்திற்கு பெயர் பெற்றது.மேலும்…

Read More