பராமரிப்பின்றி புதர் மண்டிய ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம்: திறக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராததால் பூண்டி பகுதி பெண்கள் அவதி!
கொடைக்கானல்:ஜூலை 21, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் உள்ள பூண்டி மேலூர் பகுதியில் அமைக்கப்பட்ட மகளிர் கழிப்பறை வளாகம் பராமரிப்பின்றி வீணாகி வருவதாகவும், அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூண்டி ஊராட்சியில் பதினாறாவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ. 81,000 மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டப்பட்ட நாளில் இருந்தே இந்தச் சுகாதார…
