ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில் ஈகைத் திருநாள் பெருநாள் தொழுகை இன்று காலை 7 மணிக்கு இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்ட தலைவர் ஜனாப் PS. உமர் ஃபாரூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் தொழுகையை நடத்தி வைத்தார்.
உலக அமைதி மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்காக சிறப்பு பிரார்த்தனையையும் அவர் முன்னெடுத்தார்.
நிகழ்வை அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைந்தார்.
இதில் ஆண்கள்-பெண்கள் என 15000 திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
