ஆம்பூரில் பர்தா அணிந்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் கத்தியை காட்டி 40 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 5 லட்சம் கொள்ளை அடித்து சென்ற வழக்கில் உறவினர் கைது.19 சவரன் தங்க நகை பறிமுதல்.
வாணியம்பாடி,ஆக.6- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முஹமத் பூரா முதல் தெருவில் வசித்து வருபவர் முபாரக் பாஷா. இவர் ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி பட்டப்பகலில் அவருடைய வீட்டிற்கு பர்தா அணிந்து சென்ற மர்ம நபர் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்ததாக கூறியுள்ளார். இதனை நம்பி வீட்டில் இருந்த முபாரக் பாஷாவின் மனைவி சுல்தானா கதவைத் திறந்துள்ளார். அப்போது பர்தா அணிந்து வந்த மர்ம நபர் சுல்தானாவை கத்தியை காட்டியுள்ளார். இதில்…
