Headlines
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம், கண்டுகொள்ளாத நாகர்கோவில் மாநகராட்சி

சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம், கண்டுகொள்ளாத நாகர்கோவில் மாநகராட்சி.

ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மணக்குடி சாலை வெள்ளாடிச்ச விளை அருகே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் அச்சம் நிலவிகிறது. அந்த பகுதியில் மாடுகள் சாலையில் தடையாக இருந்துகொண்டு இருப்பதால், அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பெரிய அளவில் உயிர்ச்சேதம் நிகழும் அபாயம் உள்ளது. பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளாத மாநகராட்சியிடம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்து,…

Read More
துபாயில் சிறையில் சிக்கிய கன்னியாகுமரி வாலிபரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை

துபாயில் சிறையில் சிக்கிய கன்னியாகுமரி வாலிபரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை.

ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த அருள்ரீகன் (43) என்ற நபர், துபாயில் சுற்றுலா பயண வழிகாட்டியாக பணியாற்றி வந்த நிலையில் சிக்கலில் சிக்கியுள்ளார். தகவலின்படி, துபாய் துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு படகை ரஷ்ய நாட்டு நபர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் எந்தவித தொடர்பும் இல்லாதபோதிலும், அருள்ரீகனை உடந்தையென பொய்யாக குற்றம்சாட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து, நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை…

Read More
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நூதன போராட்டம்

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நூதன போராட்டம்.

ஆக் 20, நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ராமன்புதூர் சந்திப்பில் வித்தியாசமான போராட்டம் ஒன்று நடைபெற்றது. அன்பு தேசம் மக்கள் இயக்கத் தலைவர் மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இரத்தினமணி, மத்திய அரசுப் பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தன்னுடைய உடம்பில் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே…

Read More
கன்னியாகுமரியில் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த 4 மாதக் குழந்தை உயிரிழப்பு

கன்னியாகுமரியில் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த 4 மாதக் குழந்தை உயிரிழப்பு.

ஆக் 20, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி பேச்சியம்மாளின் 4 மாத பெண் குழந்தை நேற்று தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்தபோது, தாய்ப்பால் புரையேறி மூக்குவழியாக வெளியேறியது. இதனால் குழந்தை மயக்கம் அடைந்தது. உடனடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சிறுமி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர்…

Read More
நாகர்கோவிலில் சாலை விபத்து – ஒருவருக்கு தீவிர காயம்

நாகர்கோவிலில் சாலை விபத்து – ஒருவருக்கு தீவிர காயம்.

நாகர்கோவில், ஆகஸ்ட் 20:இன்று (20.08.2025) காலை சுமார் 7.30 மணி முதல் 7.40 மணிக்குள், நாகர்கோவில் மாநகரம் வெட்டூர்நிமடம் – பார்வதிபுரம் சாலை, கட்டயன்விளை பகுதியில் சாலை விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் அடையாளம் தெரியாத ஓர் ஆண் நபர் கடுமையாக காயமடைந்துள்ளார். இவர் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நபரின் பின்னுத் தலைவர் பகுதியில் தீவிர காயம் ஏற்பட்டதோடு, ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108…

Read More
கன்னியாகுமரியில் சுற்றுலா வெள்ளம்

கன்னியாகுமரியில் சுற்றுலா வெள்ளம்.

ஆக் 19, கன்னியாகுமரி சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். கடல் நடுவே உள்ள கண்ணாடி கூண்டு பாலம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றை படகில் சென்று கண்டு ரசித்துள்ளனர். ஒரு நாளுக்கு சராசரியாக 3,500 டிக்கெட்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கேமராமேன் : ஜெனீருடன், குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர்…

Read More
தக்கலை பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனை.

தக்கலை பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனை.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலைய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு தக்கலை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அருள்சுந்தர் என்பவர் ஓட்டி வந்த ஈச்சர் டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். டிரைவர் அருள்சுந்தர் குடி போதையில் டெம்போவை ஓட்டி வந்தது தெரியவந்ததால் காவலர் பெல்ஜின் ஜோஸ் ஆல்ஹகால் பிரீத்திங் அனலைஸர்…

Read More
பதிவு பெறாத மனநல காப்பகங்கள் உடனடியாக பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

பதிவு பெறாத மனநல காப்பகங்கள் உடனடியாக பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்.

குமரி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்:குமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியார் மற்றும் அரசு மனநல நிறுவனங்களும், ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போதைய நிலைக்கு பதிவு பெறவில்லை எனக் கண்டறியப்பட்ட அனைத்து மனநல மையங்களும் உரிய முறையில் முதன்மை செயலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், சென்னை அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பங்கள் tnamhe@gmail.com என்ற மின்னஞ்சல்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பட்டா நிலங்களில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை அருண் தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்தியா முழுவதும் சிறுபான்மை இன மக்கள் மீது துன்புறுத்தல் இருக்கிறது என்ற தரவுகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாகவும், அவர்களுடைய உரிமைகளை முழுமையாகவும் பெறுகின்றனர். மேலும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை அதிக அளவில் வழங்கி வருகிறார்” எனக் கூறினார். குமரி மாவட்ட செய்தியாளர்பாவலர்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் கடல்பகுதியில் பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் பட்டியலில் முதலிடத்தில் வகைப்படுத்தப்பட்ட ராட்சத யானை திருக்கை மற்றும் பெல்ட் சுறா போன்ற மீன்கள் டண்களுக்குத் டன் அளவில் வேட்டையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் கடல்பகுதியில் பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் பட்டியலில் முதலிடத்தில் வகைப்படுத்தப்பட்ட ராட்சத யானை திருக்கை மற்றும் பெல்ட் சுறா போன்ற மீன்கள் டண்களுக்குத் டன் அளவில் வேட்டையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, சுமார் 20 டன் எடையில் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் மூன்று லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு கேரளா மாநிலத்திற்கு கடத்த முயற்சிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் வனத்துறை குழுவினர் திடீர் சோதனை நடத்தி, அந்த வாகனங்களை மடக்கிப்பிடித்துள்ளனர். எனினும், பாதுகாக்கப்பட்ட கடல் உயிரினங்களை டண் கணக்கில் வேட்டையாடியவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்தச் சம்பவம்,…

Read More