கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே மருமகனை கல்லால் தாக்கி கொலை செய்த மாமனார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
காதல் திருமணம் செய்த மனைவியை அழைத்துச் செல்ல வந்த சிபின் (25) என்பவருக்கும் மாமனார் ஞானசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, மாடியில் இருந்து ஹாலோ பிளாக் கல்லை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்த சிபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்துக்கு தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
