கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் வாணாபுரம் பகண்டை கூட்ரோடுல் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் மத்திய மோடி அரசின் கைகூலியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளருமான கிருபானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ரிஷிவந்தியம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்பாராசு ரிஷிவந்தியம் நகர காங்கிரஸ் தலைவர் ஆஇராதாகிருஷ்ணன்,…
