திருநெல்வேலியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி, ஜூலை.4: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக, INTERSHIP எனப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி [பணி அனுபவ பயிற்சி] முடித்த மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று [ஜூலை.4] காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்காக வழங்கப்பட்ட இந்த பயிற்சியின் போது, தொழில் முனைவோருக்கு தேவையான அரசு திட்டங்கள் பற்றியும், புத்தாக்கத்திற்காக வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் தெரிந்து…
