Headlines
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்..

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்..

செப் 22 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா அவர்கள், இன்று (22.09.2025) கோணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை துவக்கி வைத்து உரையாற்றினார். இந்த பயிற்சியின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக் கொண்டு, புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதோடு, வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ளும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன…

Read More
கடலூர்:கொலை செய்த இரண்டு பேர் அதிரடி கைது..!

கடலூர்:கொலை செய்த இரண்டு பேர் அதிரடி கைது..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டியாம்பாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திகேயன் என்பவர் வயது (35)கடந்த 18.09.2025 அன்று சொக்கநாதார் குளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். இதை குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து,முவிரோத காரணமாக கார்த்திகேயணை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த தென்குமார் வயது (30), மணிகண்டன் வயது (32),ஆகியோரை நேற்று (செப் 21)கைது செய்யப்பட்டனர். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து முப்பெரும் விழா : ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து முப்பெரும் விழா : ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் மனைவி நல வேட்பு விழா, அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஞானாசிரியர் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னூற்றுக்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஞானாசிரியர்கள் மற்றும் அறங்காவலர்களுக்கு விருதுகள் வழங்கியும், காந்த பரிமாற்ற தவத்துடன் கணவன் மலர் கொடுக்க, மனைவி கனி கொடுக்க கண்கள் கலக்கும் அன்பு பரிமாற்றம் நடைபெற்றது….

Read More
மதுரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயில் காளி அம்மன் கோயிலில் அன்னதானம் விழா நடைபெற்றது..

மதுரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயில் காளி அம்மன் கோயிலில் அன்னதானம் விழா நடைபெற்றது..

மகாளய அமாவாசை – குவியும் பக்தர்கள் : மகாளய அமாவாசையையொட்டி ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரையில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெயில் காளியம்மன் கோவிலில் வியாபாரிகள் சார்பில் ஜெயில் காளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பலர் கலந்து கொண்டார்கள். மகாலயா அமாவாசையை முன்னிட்டு அப்பகுதிகளின்…

Read More
ஊட்டியில் உணவு திருவிழா – சுவைகளால் குளிர்ந்த மாலை, சுற்றுலாவைச் செழுமையாக்கிய விருந்து..!

ஊட்டியில் உணவு திருவிழா – சுவைகளால் குளிர்ந்த மாலை, சுற்றுலாவைச் செழுமையாக்கிய விருந்து..!

நீலகிரியின் இதயத்தில், பசுமை சூழ்ந்த ஊட்டியின் தாவரவியல் பூங்கா சாலை நேற்று மாலை வண்ணமிகு விழாக்கோலத்தில் காட்சியளித்தது. காரணம் – ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய உணவு திருவிழா. தூய்மை பேரணியுடன் துவக்கம்: விழா, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து கேசினோ சந்திப்பு வரை நடந்த தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணியுடன் துவங்கியது. பாரம்பரிய உடைகளில் குழந்தைகள், ஓட்டல் நிர்வாகிகள், சுற்றுலா பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி, “சுத்தமான ஊட்டி –…

Read More
பேயன்குழியில் 18 வயது இளம்பெண் மரணம் – தற்கொலையா..? மர்மக் கொலையா..?

பேயன்குழியில் 18 வயது இளம்பெண் மரணம் – தற்கொலையா..? மர்மக் கொலையா..?

செப் 21 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது. வீட்டினுள் அஸ்வினி (18) என்ற இளம்பெண், உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தீக்காயத்தில் உயிரிழந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக இரணியல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதற்கிடையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக (தமுமுக) மருத்துவ…

Read More
ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து - குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் !

ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து – குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் !

தென்காசி, செப் – 2 1 – குற்றாலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் வாக்குத் திருட்டையும், இதில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றாலம் தெஷ்ண மாற நாடார் சங்கத்தில் வைத்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் ராம் மோகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு…

Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை தூய்மை பணி...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை தூய்மை பணி…

செப் 21 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில், மாவட்டத்தில் உள்ள பல கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றது. கோவளம், துவாராக, பதி, சொத்த விளை, கணபதிபுரம் லெமூரியா பீச், மணவாளக்குறிச்சி பீச், மண்டைக்காடு, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த முறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், முன்னாள் ராணுவத்தினர் உட்பட 400க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று கடற்கரை பகுதிகளைச் சுத்தம்…

Read More
மதுரையில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது...

மதுரையில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2025 கான பொதுக்குழு கூட்டம் மதுரையில் கமல்ஹாசன் தலைமையேற்று நடந்த அனைத்து நிர்வாகிகள் முன்மொழிவை கடிதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடன் வழங்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் R.சொக்கர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

Read More
கோவை மாநகராட்சியில் சத்தமில்லாமல் நடக்கும் பணிகள்..

கோவை மாநகராட்சியில் சத்தமில்லாமல் நடக்கும் பணிகள்..

கோவை பகுதியில், விறுவிறுப்பாக நடக்கும் பணிகள் . கோவை மாநகராட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாகும். மக்கள் தொகை அடிப்படையிலும் சரி, பரப்பளவு அடிப்படையிலும் சரி, சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக உள்ளது. கோவை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருக்கிறது. இங்கு மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் சாலைகள் உள்ளன. தற்போது சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள்…

Read More