திருநெல்வேலியில், மகாத்மா காந்தியடிகள் தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற, காந்தி ஜெயந்தி விழா! அண்ணலாரின் திருவுருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்ச்சான்றோர்!
திருநெல்வேலி, அக். 2:-மகாத்மா காந்தியடிகள், திருநெல்வலி டவணில், “தேசபக்தர்” சாவடி கூத்த நயினார் பிள்ளை இல்லத்தில் அரிஜன,புனித யாத்திரை நிகழ்வின் போது, 1934 -ஆம் வருடம் ஜனவரிமாதம் 23,24 ஆகிய இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். அவர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்து, கூட ஒரு நாள் தங்கினார். நெல்லையில், காந்தியடிகள் தங்கியிருந்து மகிழ்ந்த அந்த இல்லத்தில், அவர் தங்கியிருந்த அறை புனிதமாக கருதப்பட்டு, இனறும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த புனித அறையில், மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் விழா,…
