திருநெல்வேலி கங்கை கொண்டான் “சிப்காட்” வளாக குளக்கரையில், பனை விதைகளை நடவு செய்த, பயிற்சி உதவி ஆட்சியர்! பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆர்வத்துடன் பங்கேற்பு!
திருநெல்வேலி,அக்.15:- வடகிழக்குப் பருவமழையைக் கருத்திற்கொண்டு, திருநெல்வேலி மத்திய மாவட்டம், கங்கைகொண்டான் “சிப்காட்”வளாகத்தில் அமைந்திருக்கும் “பள்ளக்குளம்” கண்மாய் கரையில், பனை விதைகள் நடவு செய்யும் பணிகள், இன்று (அக்டோபர். 15)காலையில் நடைபெற்றன. திருநெல்வேலி பயிற்சி உதவி ஆட்சியர் தவலேந்து, முதன் முதலாக சில பனை விதைகளை நடவு செய்து, இந்த நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் பாரம்பரிய மரங்களான பனை மரங்களை, கண்மாய்கள், ஏரிகள், ஊரணிகள் போன்றவற்றின் கரையோரங்களில் வளர்ப்பதன் மூலம், நீர்நிலைகளின் ஆதாரங்கள்,…
