Headlines

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்குச் சுசீந்திரம் அம்மன் விக்ரக ஊர்வலம்.

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்குச் சுசீந்திரம் அம்மன் விக்ரக ஊர்வலம்.

செப் 19 கன்னியாகுமரி

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவை முன்னிட்டு, மன்னர்களின் கால பாரம்பரிய மரபுப்படி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலிலிருந்து அம்மன் விக்ரகம், தமிழக – கேரள இரு மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டது.

முத்துக்குடைகளும் பாரம்பரிய இசைக்குழுக்களும் ஒலித்திட, ஏராளமான பக்தர்கள் வழியனுப்பி வணங்கினர். வருடந்தோறும் நடைபெறும் இவ்விழா, தமிழகம் – கேரளத்தை இணைக்கும் கலாசாரச் சங்கமமாகக் கருதப்படுகிறது.

அம்மன் விக்ரகம் ஊர்வலமாகச் சென்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சிறப்பாக வைக்கப்பட்டு, பாரம்பரிய வழிபாடுகள் நடைபெற்றிடவுள்ளது.

குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *