கன்னியாகுமரி மாவட்டம் விரிசடி காலனியில் சாதிவெறி தாக்குதல்கள் – புகார் மனு அளிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட விரிசடி காலனியில் கடந்த சில நாட்களாக சாதிவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடந்த கொலைவெறி தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஒருவர் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று மீண்டும் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ஜெயபால் என்ற இளஞ்சரை கண்ட அப்பகுதி மக்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் தெரிவித்துள்ளனர். எனினும் காவலர் அலட்சியமாக “கையில் கத்தியை சும்மா தானே வைத்திருந்தார், உங்களை…
