Headlines
வாணியம்பாடி அருகே வளையம்பட்டு ஊராட்சியில் மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம். ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி அருகே வளையம்பட்டு ஊராட்சியில் மக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம். ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி, ஆக.20- திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையம்பட்டு ஊராட்சியில் மக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வளையம்பட்டு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரவேல், மகராசி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வசந்தி அருள், எம்.கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் திருப்தி கவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை…

Read More
குளச்சல் விசைப்படகில் சிக்கிய புலி இறால் ரூ.8000க்கு ஏலம்

குளச்சல் விசைப்படகில் சிக்கிய புலி இறால் ரூ.8000க்கு ஏலம்.

ஆக் 21, கன்னியாகுமரி குளச்சல் கொட்டில்பாட்டை சேர்ந்த அகிலன் என்பவர் ஆக.19-ல் ஆழ்கடலில் மீன்பிடித்து குளச்சல் துறைமுகத்திற்கு திரும்பியிருந்தார். அவரது வலையில் கணவாய், நாக்கண்டம் மீன்களுடன் அரியவகை புலி இறால் ஒன்று சிக்கியது. 2.800 கிலோ எடை கொண்ட இந்த புலி இறாலுக்கு வெளிநாட்டில் அதிக மவுசு உள்ளதால் மீனை தனியாக உயிருடன் கடல் நீர் கலந்த பெட்டியில் போட்டு ஏலம் விட்டனர். இந்த மீனை வாங்க பலர் போட்டி போட்ட நிலையில் ரூ.8000க்கு ஏலம் போனது….

Read More
கூட்டுறவு சங்கம் அலுவலகம் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

பழனி ஆயக்குடி பொன்னாபுரம் கூட்டுறவு சங்க அலுவலகம் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

பழனி அருகே ஆயக்குடியில் பொன்னாபுரம் கூட்டுறவு சங்கம் அலுவலகம் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. எப்போது திறக்கும் என்று பொன்னாபுரம் சார்ந்த விவசாயிகளும் மக்களும் எதிர்பார்ப்புடன் பழனி சட்டமன்ற உறுப்பினருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.. 4 மாதங்களாக கூட்டுறவு சங்கம் அலுவலகம் திறப்பு விழா தள்ளி போவதால் கூட்டுறவு சங்க கடன்கள் பெற முடியாத சூழல் ஏற்படுவதாகவும் மக்கள் வாழ்வாதாரம் இல்லாத சூழல் உள்ளதாக அப்பகுதி மக்கள் விவசாயிகள் வருத்தம்.

Read More
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 20 : நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின், IPS அவர்களுடன் இணைந்து அடிக்கல் நாட்டினர். பின்னர் சிறப்புரையாற்றிய அவர்கள், ஓய்வு பெற்ற காவலர்களின் நலனுக்காக இக்கட்டிடம் பெரும் பயனளிக்கும் என தெரிவித்தனர். அத்துடன், காவல்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள்,…

Read More
கன்னியாகுமரியில் ராஜீவ் காந்தி 81வது பிறந்த நாள் நினைவுநாள் நிகழ்ச்சி

கன்னியாகுமரியில் ராஜீவ் காந்தி 81வது பிறந்த நாள் நினைவுநாள் நிகழ்ச்சி.

ஆக் 20, கன்னியாகுமரி மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81வது பிறந்த நாள் நினைவாக கன்னியாகுமரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தா. ஆதிலிங்கபெருமாள், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் என். சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி…

Read More
நாகர்கோவிலில் ரூ.43.82 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகள் துவக்கம்.

நாகர்கோவிலில் ரூ.43.82 லட்சம் மதிப்பில் தார் சாலை பணிகள் துவக்கம்.

ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலத்தின் 51வது வார்டில் ரூ.43.82 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் இன்று துவக்கமிடப்பட்டது. பிள்ளையார்புரம், சின்னநைந்தான்விளை மற்றும் திருநகர் சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் இப்பணியின் மூலம் அப்பகுதி மக்கள் சாலை வசதி பெற உள்ளனர். துவக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மேயர் ரே. மகேஷ், தெற்கு மண்டல சேர்மன் Dr. பி. முத்துராமன், மாநகராட்சி பொறியாளர் ராஜ…

Read More
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம், கண்டுகொள்ளாத நாகர்கோவில் மாநகராட்சி

சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம், கண்டுகொள்ளாத நாகர்கோவில் மாநகராட்சி.

ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மணக்குடி சாலை வெள்ளாடிச்ச விளை அருகே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் அச்சம் நிலவிகிறது. அந்த பகுதியில் மாடுகள் சாலையில் தடையாக இருந்துகொண்டு இருப்பதால், அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பெரிய அளவில் உயிர்ச்சேதம் நிகழும் அபாயம் உள்ளது. பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளாத மாநகராட்சியிடம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்து,…

Read More
துபாயில் சிறையில் சிக்கிய கன்னியாகுமரி வாலிபரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை

துபாயில் சிறையில் சிக்கிய கன்னியாகுமரி வாலிபரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை.

ஆக் 20, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த அருள்ரீகன் (43) என்ற நபர், துபாயில் சுற்றுலா பயண வழிகாட்டியாக பணியாற்றி வந்த நிலையில் சிக்கலில் சிக்கியுள்ளார். தகவலின்படி, துபாய் துறைமுகத்தில் நின்றிருந்த ஒரு படகை ரஷ்ய நாட்டு நபர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் எந்தவித தொடர்பும் இல்லாதபோதிலும், அருள்ரீகனை உடந்தையென பொய்யாக குற்றம்சாட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து, நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை…

Read More
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நூதன போராட்டம்

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நூதன போராட்டம்.

ஆக் 20, நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ராமன்புதூர் சந்திப்பில் வித்தியாசமான போராட்டம் ஒன்று நடைபெற்றது. அன்பு தேசம் மக்கள் இயக்கத் தலைவர் மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இரத்தினமணி, மத்திய அரசுப் பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தன்னுடைய உடம்பில் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே…

Read More
கன்னியாகுமரியில் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த 4 மாதக் குழந்தை உயிரிழப்பு

கன்னியாகுமரியில் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த 4 மாதக் குழந்தை உயிரிழப்பு.

ஆக் 20, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி பேச்சியம்மாளின் 4 மாத பெண் குழந்தை நேற்று தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்தபோது, தாய்ப்பால் புரையேறி மூக்குவழியாக வெளியேறியது. இதனால் குழந்தை மயக்கம் அடைந்தது. உடனடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சிறுமி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர்…

Read More