உடுமலை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்
உடுமலை நவம்பர் 02. உடுமலை நவ.3- கிராமப்புற வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் கிராம ஊராட்சிகளில் ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி உள்ளாட்சி தினத்தை ஒட்டி உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட 38 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி போடி பட்டி ஊராட்சி சுண்டக்காம்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு வட்ட வளர்ச்சி அதிகாரி சிவகுருநாதன்( வ.ஊ) தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம்…
