Headlines
புதுச்சேரியில் இருந்து காரில் 480 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் 180 ml அளவு கொண்ட 480 பாட்டில்கள் பறிமுதல்.

புதுச்சேரியில் இருந்து காரில் 480 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் 180 ml அளவு கொண்ட 480 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.கந்தசாமி அவர்களின் மேற்பார்வையில் விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி.சுஜாதா மற்றும் காவலர்கள் தலைமையில் கெங்கராம்பாளையம் சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது தெரியவந்து கார் மற்றும் எதிரிகளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி!

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி!

திருநெல்வேலி,நவ.13:-தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த, கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” நை.சிலம்பரசன் உத்தரவின் பேரில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள், மாவட்ட காவல் துறையினரால், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடுகின்ற வழிபாட்டுத்தலங்கள், தினசரி சந்தைகள், எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கும் கடைவீதிகள்,பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள்- என அனைத்து இடங்களிலும், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாதவாறு, மாவட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில்,…

Read More
கடலூர் பஸ் மோதி பரிதாப பலி

கடலூர் பஸ் மோதி பரிதாப பலி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பட்டாம்பாக்கத்தில் இருந்து அண்ணாகிராமம் செல்லும் சாலையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி சாலையோரம் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது பேருந்து மோதி விபதுக்குள்ளனது. இதில் படுக்காயம் அடைந்த நபர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். மாவட்ட நிருபர் R. விக்னேஷ்

Read More
நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபாதை பணியில் பாரபட்சம், பெரு வணிகர்களுக்குச் சலுகை – சிறு வியாபாரிகளுக்குச் சுமை.

நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபாதை பணியில் பாரபட்சம், பெரு வணிகர்களுக்குச் சலுகை – சிறு வியாபாரிகளுக்குச் சுமை.

மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் வெளியிட்ட தீவிர கண்டன அறிக்கை நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் தலைமையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தப் படியில், சவேரியார் கோயில் சந்திப்பிலிருந்து செட்டிக்குளம் வரை நடைபாதை மற்றும் வண்ணக் கற்கள் பதிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஒப்பந்ததாரர் தியாகராஜன் மேற்கொண்டு வருகிறார். ஆனால் இங்கே கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது……

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலி தொழிலாளி!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலி தொழிலாளி!

திருநெல்வேலி,நவ.12:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள “சிதம்பராபுரம்” பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது.30). தினக்கூலி தொழிலாளியான இவர், சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தெரு நாய், இவரை கடித்தது. இதை ஐயப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், வழக்கமாக வேலைக்கு சென்ற ஐயப்பனின் உடல்நிலை, திடீரென மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐயப்பனை, அவருடைய குடும்பத்தினர், நாகர் கோவில் அருகே, “ஆசாரிப்பள்ளம்” என்னும் இடத்தில் அமைந்துள்ள,…

Read More
குளச்சலில் 2 வாகனங்களில் 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

குளச்சலில் 2 வாகனங்களில் 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கன்னியாகுமரி : நவம்பர் 12. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் பறக்கும் படை மேற்கொண்ட ரோந்து பணியின் போது, பெருமளவு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. குளச்சல் அருகே இன்று (12ம் தேதி) அதிகாலை நடைபெற்ற சோதனையில், கேரளா பதிவு எண்ணுடன் வந்த சொகுசு காரில் சுமார் 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல், குளச்சல் வாட்டர் டாங்க் அருகே சோதனைக்குட்பட்ட மற்றொரு காரில் 500 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது….

Read More
திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்!

திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்!

திருநெல்வேலி,நவ.12:- “தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்” (DGP) உத்தரவுப்படி, “மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்” வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று (நவம்பர்.12) புதன்கிழமை காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, “அண்ணா விளையாட்டு அரங்கம்” அருகில் உள்ள, “மாநகர காவல் ஆணையர்” அலுவலகத்தில், “மக்கள் குறை தீர்க்கும் முகாம்” நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில், மொத்தம் ஆறு நபர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய…

Read More
நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்து! வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு S-I-R-ஐ எதிர்த்து நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. #தமிழ்நாடு_தலைகுனியாது

Read More
கோவை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை நவம்பர் : 11 கோவை சிவானந்தா காலனி சந்திப்பில் எஸ் ஐ ஆர்- ஐ எதிர்த்து திமுக தலைமையில், வி.செந்தில் பாலாஜி முன்னிலையில் கழகத்தின் மூன்று மாவட்ட செயலாளராளர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள். மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஒருங்கிணைந்த மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக தோழர்களும் ததிரளாகளகலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத் குமார்

Read More
நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!

நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!

நாகர்கோவிலில்; நவ.10 குமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில், பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் இடத்தில், சமீப காலமாக ஒரு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கட்டிடம், குமரி மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு பிரபல மீன் மற்றும் மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய தொழிற்கூடமாக அமைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திறந்த வெளிப் பகுதியில் இயங்கி வந்த அந்த…

Read More